இன்று சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி. வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக போக இன்று மாலை பைரவருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுங்கள் போதும்.

kala-bairavar-vilakku
- Advertisement -

காலத்தால் நமக்கு ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அந்தக் கஷ்டத்திற்கு கைமேல் தீர்வினை கொடுக்கக் கூடிய சக்தி காலபைரவருக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. கண்திருஷ்டி, எதிரி தொல்லை, பிறர் இட்ட சாபத்திலிருந்து தப்பிப்பதற்கு, இந்த தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபாடு செய்வது சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. தொழிலில் முன்னேற்றம் இல்லை, குடும்பத்தை நடத்திச் செல்ல வருமானம் இல்லை. கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டக்கூடிய சக்தி இந்த தேய்பிறை அஷ்டமி வழிபாட்டிற்கு உண்டு. இத்தனை அருமை பெருமைகளையும் கொண்ட தேய்பிறை அஷ்டமி நாளை யாரும் தவறவிடாதீர்கள்.

குறிப்பாக இந்த அஷ்டமி சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால், ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள், அஷ்டம சனி, பாத சனி, சனி திசை நடப்பவர்கள், இப்படி சனி பகவானால் ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷங்களின் மூலம் எதிர்கொள்ளக்கூடிய கஷ்டங்களில் இருந்து விடுபட கட்டாயம் இன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேலாக பைரவர் சன்னிதானத்திற்கு சென்று பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். சிவன் ஆலயங்களில் இருக்கக்கூடிய பைரவருக்கு இன்று மாலை, விசேஷ அபிஷேகங்கள் தீப ஆராதனை நடைபெறும். அதில் நீங்கள் கலந்து கொண்டு மனதார உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் பைரவருக்கு அரளிப்பூ மாலை சாத்தலாம். உளுந்த வடை மாலை போடலாம். தயிர்சாதம் நிவேதனமாக செய்து வைத்து, அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யலாம். இது பொதுவாக அஷ்டமி திதியில் பைரவருக்கு நாம் செய்யவேண்டிய சிறப்பான வழிபாட்டு முறைகள்.

குறிப்பாக சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், ஜாதகத்தில் சனிபகவான் சரியான நிலையில் இல்லை என்பவர்கள், இன்றைய தினம் பின் சொல்லக்கூடிய தீபத்தை பைரவருக்கு ஏற்றினால் போதும். சனி பகவானால் நமக்கு ஏற்படும் தாக்கங்கள் குறையும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகம் கிடையாது.

- Advertisement -

ஒரு பூசணிக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் உள்ளே இருக்கும் விதைகளை மொத்தமாக எடுத்து விட்டு, உள்ளே நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய கருப்பு நிற துணியில் கொஞ்சமாக கருப்பு எள்ளை வைத்து முடிச்சு போல கட்டி அந்த நல்லெண்ணெயில் போட்டு விடுங்கள். அதன் பின்பு ஒரு சிவப்பு நிற துணியை எடுத்து சுருட்டி திரி போல செய்து, பூசணிக்காயில் உள்ள நல்லெண்ணையில் போட்டு அந்த சிவப்பு நிற திரியில் தீபம் ஏற்றப்பட வேண்டும். எள் முடிச்சானது நல்லெண்ணெயில் தான் இருக்க இருக்க வேண்டும். அந்த எள் முடிச்சை ஏற்ற வேண்டாம்.

இன்று மாலை 6.30 மணிக்கு மேலாக இந்த தீபத்தை வைரவருக்கு முன்பு ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய பிரச்சினைகளை பைரவரின் பாதங்களில் வைத்து விடுங்கள். பின்பு உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தேய்பிறை நிலவு போல தேய்ந்து போவதற்கு அந்த கால பைரவர் துணையாக நிற்பார். நம்முடைய குடும்பத்திற்கு அந்த கால பைரவர் காவல் தெய்வமாக நின்று காத்தருள வேண்டுமென்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -