படிப்பில் மந்தமாக இருக்கும் பிள்ளைகளும் பரீட்சையில் வெற்றி பெற அக்னீஸ்வரருக்கு சிறப்பு வாய்ந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உடனே பலன் கிடைக்கும்

exam
- Advertisement -

குழந்தைகள் என்றால் அவர்கள் அனைவருமே கள்ள கபடம் இல்லாமல், ஒளிவுமறைவின்றி பழகுபவர்கள். இவர்கள் அனைவருமே கல்வியில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க முடியாது. ஒரு சில குழந்தைகள் எப்பொழுதும் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடிப்பர். ஒரு சில குழந்தைகள் சற்று கவனக் குறைவுடன் இருந்து சுமாரான மதிப்பெண் பெறுவர். ஆனால் என்னதான் முயற்சி செய்து சொல்லிக் கொடுத்தாலும் சில பிள்ளைகள் விளையாட்டுத்தனமாகவும் அவர்களுக்கு ஞாபக மறதி அதிகமாக இருப்பதனாலும் பரீட்சையில் தேர்வு என்பது கிடைப்பதில்லை. இவ்வாறான குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகமாகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த பரிகாரத்தை செய்திட வேண்டும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

books1

பள்ளி செல்லும் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, கல்லூரிக்குச் செல்பவர்களாக இருந்தாலும் சரி தினமும் பள்ளிக்குச் சென்று பாடங்களை கவனித்து, வீட்டிற்கு வந்து கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை செய்து, படிக்க வேண்டியவற்றை படித்து முடிப்பார்கள். ஆனால் தேர்வு என்று வந்து விட்டால் அவர்களிடம் ஒரு ஐயம் ஏற்பட்டுவிடும்.

- Advertisement -

என்னதான் நன்றாக படித்து இருந்தாலும் தேர்வில் அவற்றை சரியாக எழுத முடியுமா? என்ற ஐயம் இவர்களின் மனதில் தோன்றி விடும். தன் மீதே நம்பிக்கை இல்லாமல் சற்று குழப்ப நிலைக்கு வந்து விடுவார். இப்படி இவர்களுக்கு ஏற்படுகின்ற குழப்ப நிலையும், மன உளைச்சலும் இவர்கள் படித்த அனைத்தையும் மறக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

handwriting

சில பிள்ளைகளுக்கு படித்த பாடங்கள் சில நாட்களுக்கு மட்டுமே ஞாபகம் இருக்கும். அவை தேர்வு என்று வரும் பொழுது மீண்டும் அவற்றை படிக்க முயற்சி செய்தால் சற்றும் ஞாபகம் இல்லாமல் மறந்திருக்கும். இவ்வாறு கவனக் குறைவு உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் இருக்கின்றனர். இதுபோன்ற குழந்தைகளின் ஞாபக மறதி பிரச்னை தீரவும், அவர்களுக்கு இருக்கும் ஐயம் விலகிச் செல்லவும் அக்னீஸ்வர இறைவனை வழிபட வேண்டும்.

- Advertisement -

ஒரு முறை படித்த பாடங்கள் எப்போதும் மறவாமல் இருக்க படிக்க துவங்குவதற்கு முன்னர் இந்த மந்திரத்தை சொல்லி படிக்க ஆரம்பிக்க வேண்டும் “ஓம் ஸ்ரீம் ஸ்பேயம் ஹ்ரீம் நம்” என்ற மந்திரத்தை 50 முறை சொல்லிவிட்டு பிறகு படிக்க துவங்க வேண்டும். இந்த முறையை தொடர்ந்து கடைப்பிடித்து பாருங்கள். நீங்கள் படித்த அனைத்து பாடங்களும் எப்போதும் மறவாமல் இருக்கும்.

elakai

அடுத்ததாக தேர்வு வருவதற்கு 16 நாட்கள் முன்னதாக வீட்டிலேயே பூஜை செய்ய வேண்டும். அதற்காக ஐந்து ஏலக்காய்களை நூலில் கோர்த்துக்கொண்டு வீட்டின் பூஜை அறையில் உள்ள விநாயகருக்கு சாத்த வேண்டும்.
“ஓம் ஞான வித்தியாதர ஸ்துதாயே
ஸ்வயம் பிரகாச பரிபாலன
ஹயக்ரீவாய நமஸ்துப்யம்”

vinayagar

என்ற மந்திரத்தை சொல்லி விநாயகரின் கழுத்தில் இந்த மாலையை அணிவிக்க வேண்டும். இதனை தேர்வு எழுதும் நபர் மட்டுமே செய்ய வேண்டும். இவ்வாறு பதினாறு நாட்கள் தொடர்ந்து செய்து விட்டு, 17ஆம் நாள் அனைத்து ஏலக்காய் மாலைகளையும் அக்னீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு உள்ள சுவாமிக்கு சாற்றி விட்டு, பேரிச்சபழம், கல்கண்டு மற்றும் வட்ட வடிவிலிருக்கும் இட்லி, வடை அல்லது போண்டா இவற்றில் ஏதாவது ஒன்றையும் சேர்த்து இறைவனுக்கு படைத்து விட்டு, அதனை மற்றவர்களுக்கு தானமாக வழங்கி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயம் உங்கள் கல்வியில் தேர்ச்சி பெற முடியும்.

- Advertisement -