பித்ரு சாபத்தால் தீராத குடும்ப கஷ்டம் இருந்தால், அதற்கு தீர்வு காண இது தான் ஒரே வழி. இதை செய்யாமல் வேறு எந்த பரிகாரம் செய்தாலும் குடும்ப கஷ்டம் ஜென்ம ஜென்மத்திற்கும் தீராது.

homam
- Advertisement -

ஒருசில வீட்டை பார்த்திருப்போம். அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து கஷ்டம் வந்து கொண்டே இருக்கும். கஷ்டம் வருவது என்பது மனிதர்களுக்கு இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால் அந்த கஷ்டமே ஒரு சிலருக்கு வாழ்க்கையாக இருக்கும். ஆயுசுக்கும் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வீட்டில் இருக்கும். வாரிசுகளுக்கு திருமணமே நடக்காது. திருமணம் நடந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது. எல்லாம் இருந்தால் இதை விடுத்து வேறு ஏதாவது ஒரு புது பிரச்சனை வந்து நிற்கும். இப்படி ஆயுசுக்கும் கஷ்டத்தில் வாடுபவர்கள் செய்ய வேண்டிய ஒரு பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே ஒருவருடைய குடும்பத்தில் யாரேனும் துர்மரணம் அடைந்திருந்தாலோ தற்கொலை செய்து இறந்திருந்தாலோ, பெற்ற அம்மா அப்பாவை சரியாக பார்த்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் விட்டு அவர்களை வயதான காலத்தில் கஷ்டப்பட் விட்டு இருந்தாலோ, அவர்களுக்கு நிச்சயம் பித்ரு சாபம் இருக்கும். இறந்தவர்களுக்கு சரியான வகையில் திதி தர்ப்பணம் செய்யாமல் விட்டு விட்டாலும் பித்ரு சாபம் இருக்கும். இதைதான் முன்னோர் சாபம் என்று சொல்லுவார்கள். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் ஏதோ ஒரு வகையில் சலன பட்டுக் கொண்டே இருந்தால் அதன் மூலம் நம்முடைய குடும்பத்திற்கு கஷ்டம் வரும் இதனை சரி செய்வது எப்படி.

- Advertisement -

மிக மிக சுலபமான வழி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த பரிகாரத்தை செய்ய கொஞ்சம் செலவு ஆகத்தான் செய்யும். கஷ்டத்தோடு கஷ்டமாக இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். ராமேஸ்வரம் சென்று அந்த இடத்தில் ‘திலா ஹோமம்’ செய்ய வேண்டும். நம்முடைய பித்ருக்களின் மனதை குளிர வைக்க இது மட்டும் தான் ஒரே வழி. உங்களுடைய ஜாதகத்தில் பித்ரு சாபம் இருந்தால் இந்த பரிகாரத்தை செய்தால் மட்டுமே குடும்பத்தில் நல்லது நடக்கும்.

கடனை உடனை வாங்கியாவது குடும்பத்தோடு ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வதன் மூலம் நிச்சயமாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். இருந்த கஷ்டம் எல்லாம் ஒவ்வொன்றாக படிப்படியாக குறையத் தொடங்கும். சரி எங்களால் கடன்வாங்கி கூட ராமேஸ்வரம் செல்ல முடியாத நிலைமை உள்ளது என்பவர்கள் என்ன செய்யலாம்.

- Advertisement -

தினமும் வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும். உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பசுமாட்டிற்கு ஏதாவது உணவு சாப்பிடுவதற்காக வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை எல்லாம் செய்து விட்டால், வாழ்க்கையில் கஷ்டம் என்பதஞ வராது என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. கஷ்டம் வரும் ஆனால் கஷ்டத்தின் மூலம் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

திருப்தி அடையாத ஆத்மாக்களை முழுமையான வகையில் திருப்தி அடையச் செய்து, அவர்களுடைய ஆசிர்வாதம் பரிபூரணமாக பெற்றுத்தரக்கூடிய வேலையைத்தான் இந்த திலா ஹோமம் செய்கின்றது. தலைமுறை தலைமுறையாக சில ஆத்மாக்கள் சாந்தி அடையாமல் ஏங்கி தவித்து கொண்டு இருக்கும். இப்படிப்பட்ட எல்லா ஆத்மாக்களின் மனதும் சாந்தி அடைய மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பாருங்கள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு நிச்சயம் நல்லபலன் கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -