இந்த வார ராசிபலன் 12-07-2021 முதல் 18-07-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியடையும். ஆனால், அதற்காக கொஞ்சம் நாட்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் அவ்வபோது வந்து தொல்லை கொடுக்கும். வருமானத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழில் முன்னேற்ற தோடு செல்லும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும். அம்மன் கோவில்களுக்கு சிவப்பு நிற குங்குமத்தை தானமாக கொடுங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிவரப் போகும், வாரமாக அமையப்போகின்றது. உங்களுடைய பேச்சாற்றலால், உங்களை சுற்றி இருப்பவர்களை, உங்கள் வசப்படுத்தி விடுவீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட போகிறார்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் சம்பளமும் உயரப் போகின்றது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முடிந்தவரை வியாபாரத்தில் அதிகப்படியான முதலீட்டினை இந்த வாதம் செய்ய வேண்டாம். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும். மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு வாசனை நிறைந்த மல்லிகை பூக்களை வாங்கிக் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப்போகிறது. உங்களுடைய உடல் ஆரோக்கியம், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்திலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய பொருட்களை நீங்கள் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற வம்பு வழக்குகளுக்கு செல்ல வேண்டாம். வீண் வாக்குவாதம் பிரச்சினைகளில் கொண்டு போய் விட்டு விடும். தேவையற்ற பண பரிமாற்றங்களில் அனாவசியமாக தலையிடாதீர்கள். நஷ்டம் உங்களுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பெருமாள் வழிபாடு நன்மை தரும்‌. பசுமாட்டிற்கு கீரையை வாங்கி தானம் கொடுப்பது நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் எந்த ஒரு புதிய முயற்சிகளையும் எடுக்க வேண்டாம். உங்களுடைய வேலைகளை சரிவர செய்து வந்தாலே போதும். உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அலுவலகப் பணியில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். இதனால் மனக் அழுத்தம் ஏற்படும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைத்துவிடும். தினம் தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும். குரு பகவானுக்கு வியாழக்கிழமை கொண்டைக்கடலை மாலை, அணிவித்து மஞ்சள் நிறப் பூவால் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் வாய்ந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பல வாய்ப்புகள், உங்கள் வீட்டு கதவை தட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி வந்து சேரும். முன்னேற்றத்திற்கு உகந்த வாரமான இந்த வாரம், குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கு வாய்ப்பு இருக்கின்றது. கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தால் யாராவது விட்டுத் தரவேண்டும். நெருங்கிய உறவுகள் வீட்டிற்கு வந்து ஏதாவது விஷயங்களைப் பேசினாலும், விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அனாவசியமாக வாக்குவாதம் செய்யாதீர்கள். துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாம்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானத்திற்கு எந்த ஒரு பற்றாக்குறையும் இருக்காது. பணம் பல வழிகளில் வந்து உங்களது பையை நிரப்பி இருக்கும். ஆனால் வாழ்க்கையில் தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் நல்லது என்று செய்யக் கூடிய சில விஷயங்கள் கூட உங்களுக்கு கெட்டதாக அமைந்துவிடும். யாருக்கும் நல்லது செய்வதற்கு கூட, இந்த வாரம் நீங்கள் முன்னே செல்ல வேண்டாம். கண்முன்னே யாரோ இருவர் சண்டை போட்டுக் கொண்டால் கூட அவர்களை விலகிச் செல்ல போகாதீங்க. பிறகு உங்களுக்கு தான் வம்பு வரும் ‌ வண்டி வாகனம் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மீனாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும். மொட்டை மாடிக்கு வரும் பறவைக்கு தானியங்களை இறையாக போடுவது நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. நீங்கள் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் நீங்கள் செய்யும் முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைக்கும். நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். எல்லோரும் பாராட்டும் அளவிற்கு உயர்ந்த இடம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. திங்கட்கிழமை விநாயகர் வழிபாடு நன்மை தரும். விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் இரண்டு அகல் தீபங்கள் ஏற்றுவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உயர்வு தரும் வாரமாக தான் இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியம், இந்த வாரம் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் லேசாக பிரச்சினைகள் தலை தூக்கும். இருப்பினும் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடப்பது நன்மை தரும். இந்த சூழ்நிலையில் புதிய வேலை தேடுவது கொஞ்சம் சிரமமான காரியம். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. புதன்கிழமை பெருமாள் வழிபாடு செய்யவேண்டும். துளசி இலையோடு பெருமாளை தரிசனம் செய்ய நல்ல பலன்கள் உண்டு.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன உறுதியான வாரமாக இருக்கப்போகின்றது. யாரைக் கண்டும் பயப்பட மாட்டீர்கள். பிரச்சனை என்று வந்தால் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிவிட்டு வேலையை முடிப்பீர்கள். சொல்லப்போனால் உங்களைப் பார்த்து, உங்கள் உடன் இருப்பவர்களே பயப்பட போகிறார்கள். அந்த அளவிற்கு உங்களுடைய துணிச்சல் இருக்க போகின்றது. இந்த துணிச்சலின் மூலம் உங்களுக்கு பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதால், கொஞ்சம் அடக்கத்தோடு இருப்பது நன்மை தரும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்க.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஏதாவது ஒரு சிறிய விஷயத்தில் பொய் சொல்லி, சிறிய விஷயத்தை மறைத்தாலும் கூட அது உங்களுக்கு பிரச்சனை தந்துவிடும். தெரியாமல் தவறு செய்தாலும் பரவாயில்லை. உங்கள் தவறை ஒப்புக் கொள்ளுங்கள். அடுத்த படியாக உங்களுக்கு இந்த வாரம் எதிரிகள் தொல்லை இருக்கும். எதிரிகள் பிரச்சினைக்காக உங்கள் வீடு தேடி வந்தாலும் அவர்களுடன் சண்டை போடவேண்டாம். சமாதானம் ஆகவே செல்லுங்கள். கோபப்பட வேண்டாம். நிதானத்தை கையாண்டால் இந்த வாரம் பிரச்சினைகள் இருக்காது. தினமும் காலையில் எழுந்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி தியானம் செய்ய வேண்டும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். இன்றைக்கு செய்ய வேண்டிய வேலையை நாளைக்கு என்று தள்ளிப் போட்டால், பிரச்சனை உங்களுக்கு தான். எப்போதும் உடலை சுறுசுறுப்பாக இயக்க, காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு அதன் பின்பு இயல்பு வாழ்க்கையை தொடங்க வேண்டும். கடன் வாங்கக் கூடாது. கடன் வாங்கினால் அதை திருப்பி அடைவதற்குள் பிரச்சனைகள் பல விதத்தில் வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்து வாருங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவால் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. வேலை செய்யுமிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். கிடைத்த பதவி உயர்வை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்று, சில சவால்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத விதமாக வரப்போகும் நல்ல வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளாமல் சில தடுமாற்றங்கள் இருக்கும். பல வாய்ப்புகள் உங்களை நோக்கி வரப்போகின்றது. ஆனால் உங்களுக்குள் இருக்கும் பயம், உங்கள் முன்னேற்றத்தை தவிர்த்து விடக்கூடாது. மன உறுதியோடும் முயற்சி செய்தால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு. குலதெய்வ வழிபாட்டை தினமும் செய்து வாருங்கள். ஏழை குழந்தைகளுக்கு படிப்பதற்கு தேவையான உதவியை செய்து வாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -