பூஜை விரதம் எதுவும் இல்லாமல் தூங்கி எழுந்தவுடன் இந்த ஒரு வரி மந்திர வார்த்தையை மூன்று முறை உச்சரித்தாலே போதும். உங்கள் தலையெழுத்தே மாறி ராஜ போக வாழ்க்கையை வாழலாம்.

wake up mathiram
- Advertisement -

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலும் விதியின் படியும் நம்முடைய கர்ம வினைகளின் படியும் தான் நடக்கிறது. நாம் செய்த பாவ புண்ணியங்களின் கணக்கீட்டின்படியே வாழும் இந்த காலத்தில் நமக்கான நன்மை தீமைகளும் தொடர்ந்து வரும். இது விதியின் பயனாலும் அல்லது நம்முடைய கர்ம வினைகளின் பயனலோ நமக்கு ஏற்படும் துன்பங்களையும் துயரங்களையும் தடுக்கவும் அதிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ளவும் தான் இறை வழிபாட்டு, பரிகாரங்கள், பூஜை என ஒவ்வொன்றையும் நம்முடைய சாஸ்திரங்கள் தந்திருக்கிறது.

அந்த வகையில் நம்முடைய விதி பலனையே மாற்றி அமைக்க கூட ஒரு அற்புதமான மந்திரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த மந்திரத்தை ஜெபிக்க நீங்கள் விரதம் இருக்க வேண்டும், பூஜை செய்ய வேண்டும், வழிபாடு விதிமுறைகள் என எதுவுமே கிடையாது. காலையில் தூங்கி எழுந்தவுடன் முதல் காரியமாக இதை செய்தால் போதும். நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயமாக கூடிய வாய்ப்பை இந்த மந்திரம் ஏற்படுத்தி தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தூங்கி எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரம்
ஒரு மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியமானதோ அதை விட முக்கியம் காலையில் கண்விழிக்கும் பொழுது அந்த மனிதன் நினைக்கும் செயலும் பார்க்கும் பொருளும். இது தான் அவனுடைய அன்றைய நாளை தீர்மானிக்கும். எனவே தான் காலையில் எழுந்திருக்கும் போதே நல்லவற்றை பற்றி சிந்தித்தும் நல்லவற்றை பார்த்தும் எழ வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அந்த வகையில் காலையில் தூங்கி எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் வழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இது மிகவும் நல்லதும் கூட. ஏனெனில் ஒவ்வொருவரின் உள்ளங்கையிலும் மகாலட்சுமி தாயார் வீற்றிருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. ஆகையால் தான் தூங்கி எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் பழக்கம் நம்முடைய வழக்கத்தில் உள்ளது. அப்படி உள்ளங்கையை பார்க்கும் பொழுது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

அம் பகவ
என்ற இந்த மந்திரத்தை நாம் காலையில் உள்ளங்கையை பார்த்து மூன்று முறை சொன்னால் போதும். நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் நிகழும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஹம் என்றால் மங்கள அர்ச்சனை எனவும் பகவ என்றால் பகவானை குறிக்கும் சொல்லாகவும் உள்ளது. மங்கள அர்ச்சனைகள் பொருந்திய பகவானை நாம் நமஸ்கரிப்பது போல் ஆகும்.

இந்த மந்திரத்தை சொல்லும் போது உங்களுடைய இஷ்ட தெய்வம் குலதெய்வம் என யாரை வேண்டுமானாலும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். பகவ என்ற சொல் ஆண் தெய்வத்தை குறிப்பது போல இருந்தாலும் உங்களுடைய குலதெய்வமும் இஷ்ட தெய்வமும் பெண் தெய்வமாக இருந்தாலும் இதே மந்திரத்தை சொல்லி நினைத்துக் கொள்ளலாம் தவறு ஒன்றும் இல்லை இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் வாழ்க்கை நல்ல ஒரு சுபிக்ஷ நிலைக்கு மாறி விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த மந்திர முறையை நம்பிக்கையுடன் செய்து உங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றிக் கொள்ள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -