பல வருடங்களாக வேலை தேடியும் கிடைக்காதவர்கள், தொழிலில் எந்த வித முன்னேற்றமும் இல்லாதவர்கள் வீட்டில் இந்த சிறிய மாற்றத்தை செய்து பாருங்கள். நீங்கள் கனவிலும் நினைக்காத முன்னேற்றம் உங்களை தேடி வரும்.

vastu-for-job
- Advertisement -

ஒரு மனிதனின் வருமானத்திற்கு மூல ஆதாரமே அவன் செய்யும் தொழிலோ அல்லது வேலையோ தான். அது நல்ல முறையில் அமைந்தால் மட்டுமே மேலும் மேலும் முன்னேற்ற பாதையில் செல்ல முடியும். இந்த வேலை வாய்ப்பு, தொழில் அனைவருக்கும் நினைத்த உடனே அல்லது நினைத்த மாத்திரத்தில் கிடைத்து விடாது. அப்படியே நடந்தாலும் அதில் நஷ்டம் இல்லாமல் தொடர்வது பெருஞ்சிக்கல் தான். இது போன்ற வேலை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாக இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

வேலை கிடைக்க, தொழிலில் லாபம் பெற செய்ய வேண்டிய பரிகாரம்:
வேலை தேடுபவர்கள் முதலில் இந்த வேலைக்காக தங்களை தயார் படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். அதே போல் வேலை தேடி செல்லும் போது அவர்களின் ராசிக்கு தகுந்த நிறத்தினை அணிந்து செல்வது மிக மிக நல்லது. அதே போல் உடைகளை நல்ல நேர்த்தியாக உடுத்தி சொல்ல வேண்டும். இதையெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட ஆளுமையை வெளிப்படுத்தும். இத்துடன் நீங்கள் செல்லும் பணி இடத்திற்கான தன்மை, தகவல் அனைத்தையும் தெரிந்து கொண்டு செல்வது உங்களை மேலும் முன்னேற்றம் அடைய செய்யும்.

- Advertisement -

இவையெல்லாம் வேலை தேடி செல்பவர்களுக்கான பொதுவான கருத்து. ஆன்மீக ரீதியாக இதற்கு என்ன பரிகாரம் என்பதையும் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம். வேலை தேடுபவர்கள் அல்லது சொந்த தொழில் நடத்தி அதில் முன்னேற்றம் இல்லாதவர்கள் இருவருக்குமே இந்த பரிகாரம் பொருந்தும்.

இதற்கு முதலில் உங்கள் வீட்டின் வடக்கு சுவற்றில் இருக்கும் தேவையற்ற அலங்கார பொருட்களை எடுத்து விட வேண்டும். அதாவது ஒரு சிலர் சுவற்றில் அலமாரிகள் அடித்திருப்பார்கள் அல்லது அலங்காரத்திற்கான வேறு சில வடிவமைப்பினை செய்திருப்பார்கள். இது போன்ற எதுவும் வடக்கு சுவற்றில் அமைந்திருக்கக் கூடாது.

- Advertisement -

இதுவும் நம் முன்னோர்கள் சொல்லிய கூற்று தான். வடக்கு சுவற்றில் எப்போதும் பாரம் ஏற்றக் கூடாது இது குடும்பத்திற்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். அதே போல் அந்த மூலையில் எந்த கனமான பொருட்களையும் வைக்க மாட்டார்கள். அதே போல் தான் வேலை தொடர்பான பிரச்சனைகள் சரியாக வடக்கு சுவற்றில் இது போன்று எதுவும் இல்லாமல் பார்க்க வேண்டும். இவையெல்லாம் அந்த இடத்தில் தேவையில்லாத அதிர்வலைகளை உருவாக்கி நல்ல விஷயங்கள் நடைபெறுவதை தடுத்து விடும் என்று சொல்லப்படுகிறது.

இதே போல் இவர்கள் வடக்கு சுவற்றில் இந்த ஒரு பொருளை வைப்பதாலும் தொழில் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அது வேறு ஒன்றும் இல்லை கண்ணாடி தான். வடக்கு சுவற்றில் கண்ணாடியை மாட்டி வைக்கும் போது வேலை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். இதை யார் வேலை தேடுகிறார்களோ அல்லது யார் தொழிலை நடத்துகிறார்களோ அவர்கள் தான் செய்ய வேண்டும் இவர்களுக்காக வீட்டில் உள்ள மற்றவர் செய்யக் கூடாது.

இந்த மாற்றத்தை செய்தால் மட்டுமே வேலை கிடைத்து விடுமா என்று தோன்றாலாம். இதை மட்டும் செய்தால் வேலை கிடைக்காது தான். இதை செய்து விட்டு வேலை கிடைக்க நாம் செய்ய வேண்டிய முயற்சிகளை செய்ய வேண்டும். இந்த மாற்றத்தை செய்யும் போது நம் வீட்டில் இருக்கும் தேவையில்லாத அதிர்வலைகள் நீங்கி நல்ல அதிர்வலைகளை உண்டாக்கி இதன் மூலம் நம்முடைய எண்ணங்கள் உயர்வு படும். புதுப்புது எண்ணங்கள் தோன்றும் புதிய முயற்சிகள் எடுப்பதற்கான உத்வேகம் பிறக்கும் இது தான் இந்த பரிகாரத்தின் நோக்கம்.

- Advertisement -