இந்த வார்த்தைகளை சொல்லி துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றினால் உங்களுடைய வீட்டில் செல்வ வளம் ஊற்றெடுக்கும். ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் அளவில்லாமல் சேரும்.

thulasi
- Advertisement -

வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சத்தை அளவில்லாமல் பெறுவதற்கு ஒரு சில வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பின் சொல்லக்கூடிய வழிபாட்டு முறைகளில் உங்களால் எதை பின்பற்ற முடியுமோ ஏதாவது ஒரு வழிபாட்டை பின்பற்றினால் கூட வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். சந்தோஷம் அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். பண கஷ்டத்தை போக்கக்கூடிய பலன் தரும் வழிகள் இதோ உங்களுக்காக.

துளசி வழிபாட்டிற்கு, சொல்லக்கூடிய எத்தனையோ மந்திரங்கள் நமக்கு சாஸ்திரத்தில் உள்ளது. ஆனால் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது, கண்ணா, கிருஷ்ணா, கோபாலா, மாதவா, யாதவா, என்று சொன்னால் மிக மிக நல்லது.  மந்திரங்களை விட இந்த வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றும் போது இனி இந்த வார்த்தைகளை நீங்களும் மனதார சொல்லுங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -

கோவிலுக்கு சென்றால் அங்கு இருக்கும் மூலவரை மட்டும் தான் முக்கியத்துவம் கொடுத்து நாம் வழிபாடு செய்கின்றோம். கோவிலை சுற்றி இருக்கக்கூடிய சன்னிதானத்திற்கு, நாம் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. கோவிலில் ‘சோமாஸ் கந்தர்’ என்ற சன்னிதானம் இருக்கும். இதில் சிவன் பார்வதிக்கு நடுவே முருகர் அமர்ந்திருப்பார். எந்த கோவிலுக்கு நீங்கள் சென்று தரிசனம் செய்தாலும், இந்த சோமாஸ் கந்தர் சன்னிதானத்தை பார்த்தால் அந்த இடத்தில் நின்று குடும்ப நன்மைக்காக வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.

வீட்டில் வியாழக்கிழமை தோறும் குபேரரை நினைத்து விளக்கு ஏற்றுங்கள். பூஜை அறையில் ஒரு குபேரரது சிலையை வைக்கலாம். அது உங்களுக்கு பண வரவை கொடுக்கும். கூடவே காமதேனும் கற்பக விருட்சம் அம்பாள் சேர்ந்தது போல கட்டாயமாக ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் ஒரு திருவுருவப்படம் இருக்க வேண்டும். இது பெரும்பாலும் சுவாமி படங்கள் விற்கும் கடையில் கேட்டாலே தயார் செய்து கொடுத்து விடுவார்கள். அதை வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இந்த காமதேனு கற்பக விருட்ச திருவுருவப்படத்திற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த படத்தில் இருக்கும் மகாலட்சுமி உங்களுக்கு செல்வ வளங்களை அள்ளி அள்ளி கொடுப்பதாகவும், நீங்கள் அதை கை நிறைய வாங்கிக் கொள்வதாகவும் மனநிறைவோடு வெள்ளிக்கிழமை பூஜை செய்வது வீட்டிற்கு வருமானத்தை இரட்டிப்பாக கொடுக்கும்.

உங்களால் முடிந்தால் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ யாருக்காவது இந்த காமதேனு கற்பக விருச்ச படத்தை பரிசாக அளிக்கலாம். அதை பரிசாக பெறுபவர்கள் அதிர்ஷ்டசாலி. அடுத்தவர்களுக்கு ஐஸ்வர்யம் பெருக வேண்டும் என்று இதை பரிசாக கொடுப்பவர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.

‘ஓம் ரீங் வசி வசி, தனம் பணம் தினம் தினம்’ இந்த வார்த்தைகளை தினமும் சொல்லுங்கள். பணம் உங்களுக்கு வசியம் ஆகும். தினமும் சொல்ல முடியவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமை அன்று விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த வார்த்தைகளை சொல்லும்போது பண வசியம் ஏற்படும். பணக்கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும்‌. மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -