வெள்ளை சாதத்தோடு இந்த 1 பொருளை மட்டும் சேர்த்து பெருமாளுக்கு நிவேதனமாக வைத்தால் போதும். உங்களுடைய பணக் கஷ்டம் எல்லாம் தீரும்.

perumal
- Advertisement -

வீட்டில் தீராத பண கஷ்டம் உள்ளது. மேலும் மேலும் கடன்சுமை ஏறிக்கொண்டே செல்கிறது. ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வழியில்லை. வருமானத்திற்கு வழியில்லை. வீட்டில் குழந்தைகளுக்கு தேவையான செலவுகளை செய்வதற்கு கூட பெற்றோரால் பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்ற சூழ்நிலை கூட இருக்கிறது. எவ்வளவோ உழைத்து பார்த்தாகிவிட்டோம். ஆனால் மகாலட்சுமியை வீட்டில் தங்க வைக்க முடியவே இல்லை என்பவர்கள் கொஞ்சம் சிரமப்பட்டு இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்.

இந்த பரிகாரத்தை செய்ய நிறைய காசு பணம் செலவழிக்க கூட தேவை கிடையாது. வெள்ளையான மனதோடு, இந்த வெள்ளை நிற சாதத்தை பெருமாளுக்கு நிவேதனமாக வைத்து தினம்தோறும் வழிபாடு செய்து வர செல்வம் உங்களுடைய வீட்டில் ஊற்றெடுக்க தொடங்கும்.

- Advertisement -

அது என்ன சாதகமாக இருக்கும் என்றுதானே சிந்திக்கிறீர்கள். பெருமாளுக்கு மிகவும் பிடித்தது, மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய துளசி சாதம் தான் அந்த சாதம். தினமும் நம்முடைய எல்லோர் வீட்டிலும் வெள்ளை சாதம் வைப்பது வழக்கமாக இருக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு சமைக்க வேண்டும். எச்சில் செய்வதற்கு முன்பு சமைத்த வெள்ளை சாதத்தில் இருந்து சிறிதளவு வெள்ளை சாதம் மட்டும் தனியாக ஒரு தட்டில் போட்டு, அந்த சாதம் லேசாக சூடு ஆறிய பின்பு அதில் சுத்தமான பசு நெய் விட்டு, 2 அல்லது 3 துளசி இலைகளை அந்த சாதத்தின் மேலே தூவி அதை அப்படியே பெருமாளுக்கு நிவேதனமாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு சிறிய மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவேண்டும். இறுதியாக கற்பூர ஆராதனை காட்டி பெருமாள் வழிபாட்டை முடித்துக் கொண்டு இந்த நைவேத்தியத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட்டு விடலாம்.

வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை சனிக்கிழமை என்று கணக்குப் பார்க்காமல் தினம்தோறும் வருடம் வரக்கூடிய 365 நாளும் பெருமாளுக்கு இந்த துளசி சாதத்தை பிரசாதமாக வைத்து வேண்டி வழிபடுபவர்கள் வீட்டில் பணக்கஷ்டம் என்பதே இருக்காது. வறுமை நிரந்தரமாக வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்படும். சொல்லப்போனால் உங்கள் பரம்பரையே செல்வ செழிப்போடு வாழ்வதற்கு இந்த சிறிய பரிகாரம் கைமேல் பலனை கொடுக்கும்.

எல்லோர் வீட்டிலும் பெரும்பாலும் பெருமாளின் திருவுருவ படம் இருக்கும். இல்லாதவர்கள் பெருமாளோடு மகாலட்சுமி சேர்ந்து இருக்கக் கூடிய படமாக பார்த்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். பெருமாளும் லட்சுமியும் ஆடை ஆபரண அலங்காரத்தோடு ஜொலிக்கும் திருவுருவப் படத்தை வீட்டில் வாங்கி வைப்பது மேலும் சிறப்பைத் தரும். நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன பரிகாரங்கள் கூட நமக்கு எதிர்பாராத பெரிய பலனை தரும் என்பது தான் நிதர்சனமான உண்மை. நீங்களும் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -