இன்றைய ராசிபலன் – 4 பிப்ரவரி 2022

today rasi palan 4/02/2022
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் அனுகூலம் தரும் அற்புதமான அமைப்பாக இருக்கிறது. நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒரு காரியம் நடக்க இருக்கிறது. தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம் எனவே கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக பண ரீதியான விஷயத்தை கையாளும் போது எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பும் உண்டாகும். உங்கள் திறமைகளை மேலும் மெருகேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு விஷயம் மற்றவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்த கூடிய அமைப்பாக இருக்கிறது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் எதையும் எதிர் பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. நீண்ட நாள் நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகி கூடிய யோகம் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் ஒற்றுமையை குறைவில்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தேவையற்ற வீண் பழிகளை சுமக்க நேரிடும் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் எதையும் முற்போக்கு சிந்தனையுடன் சிந்திப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அனுகூலமான பலன் காண பொறுமை காப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சியில் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. முன்கோபம் தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அமைப்பு என்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். மூன்றாம் மனிதர்களிடம் நம்பி ஒப்படைக்கும் காரியங்களில் கவனம் தேவை. ஆரம்பத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் நிதானத்துடன் இருப்பது நல்லது. நிதானம் உங்களை வெற்றியடையச் செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேகம் விவேகம் அல்ல என்பதை அறிய கூடிய காலமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் பொறுமை தேவை. அவசரம் ஆபத்தை கொடுக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் புதிய மாற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட பயணங்கள் அமைய வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகள் வழியே அனுகூல பலன் காணலாம்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் தேவை. கவலைகள் மறந்து செயற்படக்கூடிய நாளாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் மீண்டும் பயணிக்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்தும் வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகளுக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும். நீண்டநாள் இழுபறியில் இருந்த காரியம் நடக்கும். திடீர் பணவரவு திக்குமுக்காடச் செய்யும். வீண் விரையம் ஆகாமல் இருக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -