இன்றைய ராசிபலன் – 14 மார்ச் 2024

Rasi-palan-new14
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொருள் இழப்பு ஏற்படுவதற்கும், நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பேருந்தில் ஆட்டோவில் பயணம் செல்லும் போது உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி செய்யும் வேலை நல்லபடியாக செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். எந்த பிரச்சனையும் இல்லை.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மன பயம் இருக்கும். எடுக்கக்கூடிய முடிவில் தடுமாற்றம் இருக்கும். முயற்சி முழுமையாக வெற்றியை கொடுக்காது. ஆகவே, எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மனதில் உள்ள பிரச்சனையை வெளிப்படையாக பேசுங்கள். வெளிப்படையாக பேசும் போது தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழிலில் பார்ட்னரை முழுசாக நம்பாதீங்க. பண பரிவர்த்தனை கணக்கு வழக்குகளை நீங்களும் கொஞ்சம் பாருங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான கடன் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. வங்கிகளில் கடன் வாங்க முயற்சி செய்யுங்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை தரும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக கற்பனை செய்து வந்திருந்த விஷயங்கள் இன்று நிஜத்திலும் நடக்கும். மனது சந்தோஷம் அடையும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை சுப செலவை ஏற்படுத்தும். செலவை சமாளிக்க முடியாத சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சண்டை சச்சரவுகள் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் போட்டி பொறாமைகளும் இருக்கும். நண்பர்களும் எதிரிகளாக மாற வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபரை முழுசாக நம்பாதீர்கள். மேலதிகாரிகளிடம் கொஞ்சம் பணிவாக பேசுவது நல்லது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மாணவர்களுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். உங்களுடைய செயலை பாராட்டி பரிசுகளும் வழங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கலைஞர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்க போகின்றது. மனசு ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இறையருளை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் வந்த பிரச்சனைகள் குறையும். நல்ல முன்னேற்றம் இருக்கும் கடன் பிரச்சனை தீரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில், வியாபாரம் செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில் கூட உங்களுக்கு பிரச்சனை கொடுக்க சில பேர் இருப்பார்கள். அதையெல்லாம் சமாளிக்க தேவையான திறமை உங்களிடத்தில் இருந்தாலும், சின்ன சின்ன சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழல் உண்டாகும். முன் கோபப்படாதீங்க. பிரச்சனைகளை பொறுமையாக எதிர்கொள்ளுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது. நீண்ட நாட்களாக பிரச்சனை கொடுத்து வந்திருந்த சொந்த பந்தங்கள், சொத்து பிரச்சினைகள் கூட ஒரு முடிவுக்கு வரும். மாலை நேரம் குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. மாணவர்களின் திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாமியார் மருமகள் சண்டை பிரச்சனைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். குழப்பங்கள் தெளிவு பெறும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட தொழிலில் திறமையாக செயல்பட்டு லாபத்தை ஈட்டுவீர்கள். பேச்சால் அடுத்தவர்களை கவரக்கூடிய வித்தையை இன்று வெளிகாட்டுவீர்கள். வெற்றி காண்பீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் பெருகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகளும் உண்டு. நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து விடுபட தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இரவு நிம்மதியான தூக்கம் இருக்கும்.

- Advertisement -