இன்றைய ராசிபலன் (14 நவம்பர் 2021)

rasi palan 14/11/2021
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்துகளில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமை தேவை.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தவற்றை நினைத்தபடி சாதித்துக் காட்ட கூடிய வல்லமை பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாற்றம் குறித்த விஷயங்களில் கால தாமதம் ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியாளர்களின் நன்மதிப்பை பெற விரும்புகிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாட்டின் மீது அதிக ஆர்வம் காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பண ரீதியான விஷயத்தில் எச்சரிக்கையுடன் கையாளுவது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்ளவும். ஆரோக்கியம் மீது கவனம் செலுத்தவும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த விஷயத்திற்கு நேர்மறையான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வேற்றுமதத்தவர்கள் மூலம் நட்பு வட்டத்தை விரிவடைய செய்வீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் பணிகளின் மீது கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் அமைய இருக்கிறது. வருமான உயர்வு இருக்கும் என்பதால் பொருளாதார ரீதியான முன்னேற்றமும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். அவர்களுக்கு தேவையானதை கேட்டு பூர்த்தி செய்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற நாளாக இருக்கப் போகிறது எனவே கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படலாம் எனவே கூடுமானவரை வெளியிடத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் நிதானம் தேவை. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மௌனம் காப்பது மிகவும் நல்லது. பேசிய வார்த்தைகளை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்பதால் பேசும் முன் கவனத்துடன் பேசுவது நல்லது. குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகலாம். ஆரோக்கியம் எச்சரிக்கை தேவை.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட விஷயங்கள் எல்லாம் மீண்டும் வெற்றி தரும் அற்புதம் நிகழும். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காவிட்டாலும் இழப்பு எதுவும் இருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் நட்புறவு உண்டாகும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். சுய தொழிலில் பங்குதாரர்கள் மூலம் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -