இன்றைய ராசிபலன் – 18 மார்ச் 2024

Rasi-palan-new18
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியத்தோடு எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பர்ஸில் பயணம் செய்பவர்கள், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள், கூடுதல் கவனத்தோடு இருக்கவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வ கோளாறு இருக்கும். எல்லா வேலையிலும் முன் நின்று திட்டு வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தெரிந்த வேலைகளை மட்டும் செய்யுங்கள். தெரியாத வேலையில் தலையிடாதீர்கள். குறிப்பாக முந்திரிக்கொட்டை போல பேசுவதை இன்று தவிர்த்துக் கொள்ளவும். நேரத்திற்கு சாப்பிடுங்க. உணர்ச்சிவச படாதீங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேரும். மனம் மகிழ்ச்சி அடையும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். சொந்த பந்தங்களுக்கு இடையே வந்த சொத்து பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். புதுசாக வண்டி வாகனம் சொத்து வாங்குவதற்கான யோகமும் இருக்கிறது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலசல் நிறைந்த நாளாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முன்பின் தெரியாத நபரை நம்பி குடும்ப விஷயங்களை பகிர வேண்டாம். உறவினர்களும் பேசும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். அவசரப்பட்டு குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாதீங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு பாராட்டோடு சேர்த்து பரிசுகளும் கிடைக்கும். மனது சந்தோஷம் அடையும். பிரமோஷன் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சண்டை போட்டுக் கொண்டே இருந்த உங்கள் வாழ்க்கை துணை, உங்களை புரிந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. பிரிந்த கணவன் மனைவி கூட இன்று ஒன்று சேரலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் செலவுக்கான பணம் கையை வந்து சேரும். எல்லா பிரச்சனையும் தலைவிரித்து ஆடுகிறது. நல்லது எப்படி நடக்கும் என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போது, ஒரு நன்மை நடந்து விடும். ஆக மொத்தம் இன்று உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் இருக்குது. கவலைப்படாமல் வேலையில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. சுப செலவுகளும் இருக்கும், வீண் விரைய செலவுகளும் இருக்கும். செலவை சமாளிக்க முடியாமல் சில பேர் கடன் வாங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத வரவு வரும். எதிர்காலத்திற்கான சேமிப்பையும் செய்யலாம். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு நல்ல ஆதாயத்தை தேடி தரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து நடக்கவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. சுறுசுறுப்பாக இந்த வாரத்தை தொடங்கப் போறீங்க.ஸநல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். அண்ணன் தம்பி உறவு பலம் பெறும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். புதிய சொத்து வாங்கவும் யோகம் இருக்கிறது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். காதல் கை கூடும். திருமணம் வரை செல்லும். மனதிற்கு பிடித்த நிறைய விஷயங்களை செய்வீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். சுப செலவுகள் உண்டாகும். கலைஞர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடிங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் பெருசாக பிரஷர் இருக்காது. வியாபாரத்திலும் சுமூகமான போக்கே நிலவும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பேசும்போது கொஞ்சம் கவனமாக இருக்கவும். அனாவசியமான வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலையில் அதிக சுமை இருக்கும். சின்ன சின்னதா பிரச்சனைகள் வந்தால் கூட மனசு கஷ்டப்படும். எவ்வளவு சிரமப்பட்டும், நமக்கு மட்டும் ஒரு நல்லதே நடக்கவில்லையே என்ற ஏக்கம் ஒரு சில மனதில் இருக்கும். ஆனால் இன்று நீங்கள் துவண்டு போகக்கூடாது. உற்சாகத்தோடு இருந்தால் மட்டுமே பிரச்சனைகளை சமாளிக்க முடியும். இஷ்ட தெய்வ வழிபாடு உங்களுக்கு நல்லது செய்யும்.

- Advertisement -