இன்றைய ராசிபலன் – 18 மே 2022

today rasi palan 18/05/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவிரயம் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய மனோ தைரியத்தை அதிகரித்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சகோதர ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப் பட்டாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாப்பிடியான வைராக்கியத்தை சற்று தளர்த்திக் கொள்வது நல்லது. தேவையற்ற பிடிவாதம் தேவையற்ற குழப்பங்களை கொடுக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நலம் தரும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற இடங்களில் உங்களுடைய முன்கோபத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் செல்லா விட்டாலும் உங்களை தேடி வம்பு, வழக்குகள் வரக்கூடும் என்பதால் எச்சரிக்கை உணர்வு தேவை. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட வாடிக்கையாளர்களில் எளிதாக வரக்கூடிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு நிம்மதி இருக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் அக்கறை தேவை.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களுக்கு உந்துகோலாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்களில் பயணம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் இனிமையை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் உங்களுடைய பங்களிப்பை தவிர்க்கவும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. உங்களுடன் இருந்து கொண்டே சிலர் உங்களை ஏமாற்ற பார்ப்பார்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் சீராகும். மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளில் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவை இல்லாத எதிர்பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி தேவை. ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் இழுபறியில் இருந்து வந்த வேலைகளைக்கூட சுலபமாக செய்து முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்யத்தில் கூடுதல் அக்கறை தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே புதிய புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு.

- Advertisement -