இன்றைய ராசிபலன் – 18 செப்டம்பர் 2023

daily-rasi-palan18
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகளுக்கு உண்டான வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் கையால் பிள்ளையாருக்கு இன்று அருகம்புல் மாலை சாத்தினால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சாதனைகள் படைக்கக்கூடிய நாளாக இந்நாள் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சொந்த தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். இன்று உங்கள் கையால் பிள்ளையாருக்கு செம்பருத்தி பூ வாங்கி கொடுப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் என்று மன தைரியத்தோடு செயல்படுவீர்கள். யாரை கண்டும் பயப்பட மாட்டீர்கள். முகத்திற்கு நேராக பதில் சொல்லிவிட்டு, உங்கள் வேலையை பார்ப்பீர்கள். இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இன்று உங்கள் கையால் பிள்ளையாருக்கு 11 மோதகம் செய்து நிவேதியம் வைத்து ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் நன்மை நடக்கும்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை சுமையும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். இன்ற பிள்ளையாருக்கு உங்கள் கையால் எருக்கன் பூ மாலை வாங்கி போடுவது சிறப்பு.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். குறிப்பாக சொந்த தொழிலில் வரவு செலவு கணக்கை நீங்களே பாக்கனும். மற்றபடி பெரிய பிரச்சனை இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். இன்று மாலை குடும்பத்தோடு பிள்ளையார் கோவிலுக்கு செல்லுங்கள் 2 மண் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான நாளாக இருக்கும். உங்களுக்கு எது நன்மை தரும். எது தீமையை தரும் என்று அறிந்து செயல்படுவீர்கள். திறமை வெளிபடக்கூடிய நாள் இது. இந்த விடுமுறை நாளை உறவினர்களோடு சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடப் போகிறீர்கள். இன்று விநாயகருக்கு உங்கள் கையால் வாசம் நிறைந்த பூக்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். எதிரிகளால் சின்ன சின்ன பிரச்சனை இருக்கும். கடன் தொல்லை இருக்கும். வாங்கிய கடனை சில பேர் திருப்பி தர முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்ய இன்று பிள்ளையாருக்கு உங்கள் கையால் அருகம்புல் மாலை கட்டி போடுங்கள். சீக்கிரம் பணக்கஷ்டம் தீரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்து வைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிகள் குவியும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் நன்மையை கொடுக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். இந்த நன்மை தரக்கூடிய நாளில் பிள்ளையார் கோவிலுக்கு சென்று ஐந்து தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல் வையுங்கள். பசியோடு இருக்கும் இரண்டு பேருக்கு அன்னதானம் செய்வது நல்லது. நன்மை நடக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக தான் இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கட்டுமான தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும். இன்று விநாயகருக்கு சுண்டல் கொழுக்கட்டை செய்து வைத்து வழிபாடு செய்யுங்கள் நன்மை பெறலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆனந்தமாக நாளை கழிப்பீர்கள். உங்களுடைய பெண் குழந்தைகளின் மூலம் சந்தோஷம் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஜாமின் கையெழுத்து போடாதீங்க. இன்று பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைப்பது நன்மையை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் இன்று உருப்படியாக சில காரியங்களை செய்வீர்கள்‌. நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று கிடப்பில் போட்டு வைத்த வேலைகளை என்று எடுக்கலாம். எதிர்காலத்தை பற்றி சிந்தித்து சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். இன்ற பிள்ளையாருக்கு உங்கள் கையால் மாதுளம் பழம் நிவேதனமாக வாங்கி வைத்து பூஜை செய்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

- Advertisement -