இன்றைய ராசிபலன் – 21 மே 2022

today rasi palan 21/05/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை நேர்மறையாக இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதமான, மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடுமையான உழைப்பால் முன்னேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி நிறைவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடந்தகால நிகழ்வைப் பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். தேவையற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்காமல் உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுயமாக முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சவாலான வேலைகளை கூட எளிதாக முடிவடைய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பெண்களுக்கு தைரியம் பெருகும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கக்கூடிய முக்கிய முயற்சிகள் லாபத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. போட்டியாளர்களை எதிர்த்துப் போராடுவதில் சமயோசிதமாக செயல்படுவது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இழந்த அந்தஸ்து மீண்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய திட்டங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்லும். தடைப்பட்ட திருமண சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் அனுகூல பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில தந்திரங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனம் தேவை. பெண்களுக்கு கஷ்டமான வேலையும் சுலபமாக முடிவடையும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைப்பு சாதகமற்றதாக இருப்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற முன்பின் தெரியாத நபர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் டென்ஷன் காணப்படலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அணுகுமுறை மற்றவர்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுபவ அறிவு அதிகரிக்கும். போட்டியாளர்களை சமாளிக்க தேவையற்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற நபர்களின் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரயங்கள் அதிகரிக்கும் என்பதால் ஆடம்பரத்தை குறைப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் இணக்கம் தேவை.

- Advertisement -