இன்றைய ராசிபலன் – 22 ஏப்ரல் 2024

Rasi-palan-new22
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதளவில் கொஞ்சம் கோபம் இருக்கும். நீங்கள் யாரை நம்பி இருந்தீர்களோ, அவர்களே உங்களுக்கு மோசம் செய்து விடுவார்கள். நண்பர்களாக இருந்தாலும், உங்களுக்கு உதவி செய்ய இன்று வரமாட்டார்கள்., இதனால் எல்லா வேலையிலும் நீங்கள் தான் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். காரியத்தில் கண்ணாக இருங்கள். நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். புது வேலை தேடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு இந்த நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கப் போகின்றது. தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். புதிய முதலீட்டை செய்யலாம். முன்னேற்றம் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நினைத்த காரியத்தை நடத்திக் காட்டுவீர்கள். இந்த வார தொடக்கத்திலேயே அடுத்தடுத்த வெற்றிகள் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கும். இதனால் நிதி நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக உயரும். கடன் பிரச்சனையில் இருந்து வெளி வருவீர்கள். மனைவி சொல்லக்கூடிய பேச்சை கேட்கும் போது நிறைய நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று சாந்தமாக இருக்க வேண்டும். அதிகம் கோபம் வேண்டாம். இன்று நிதானமாக சிந்தித்தால் உங்களுக்கான நல்லது நடக்கும். எதையும் முன்கூட்டியே பிளான் பண்ணுங்க. கடைசி நிமிஷத்தில் ஒரு வேலையை செய்யும் போது பிரச்சனைகள் வரத்தான் செய்யும். நேரத்தை வீணாக்காதீங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளுடைய படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வாரா கடன் வசூல் ஆகும். சேமிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்கள் இன்று கணவன் சொல்லக்கூடிய பேச்சைக் கேட்டால் நல்லது நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன வியாபாரிகள் கூட இன்று நல்லபடியாக கல்லா கட்டலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் பயத்தை உண்டு பண்ணும். வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தோல்வியை கண்டு பயப்படவும் கூடாது. வெற்றியை கண்டு ரொம்பவும் ஆர்ப்பாட்டமும் செய்ய கூடாது. வாழ்க்கை போன போக்கில் நீங்களும் செல்லுங்கள். உங்களுடைய வேலையில் கொஞ்சம் கவனமாக இருந்தாலே போதும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாக கிடைக்கும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். ஆனால் கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். அதை சமாளிப்பதில் சிரமங்கள் இருக்கும். சொந்த தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை முழுசாக நம்பாதீங்க. அதற்காக சந்தேகப்படச் சொல்லவில்லை. எல்லாவற்றுக்கும் சரியான கணக்கு இருக்கட்டும்.

விருச்சகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று சவால் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்தையும் கொஞ்சம் முட்டி மோதி தான் ஜெயிக்க வேண்டி இருக்கும். நண்பர்களாகவே இருந்தாலும் அவர்களை கண்மூடித்தனமாக நம்பாதீங்க. உறவுகளாக இருந்தாலும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எல்லைக்கோடு தேவை. வீட்டு விஷயம் ரொம்பவும் பர்சனல் விஷயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் பெயர் புகழ் உண்டாகும். கடன் சுமை குறையும். சேல்ஸ்மேன் வேலை செய்பவர்களுக்கு டார்கெட்டை முடிப்பதற்கு சரியான நாள் இது. எதிர்பாராத பெரிய ஆர்டர் உங்களுக்கு லக்காக வரப்போகின்றது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று காலை அரை மணி நேரத்துக்கு முன்பாகவே கண்விழித்து எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக செய்து விட வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. இந்த வேலையை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. உங்களுக்கு சுறுசுறுப்பு மட்டுமே இன்று வெற்றியை கொடுக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொது வாழ்க்கையில் அதிகமான ஈடுபாடு இருக்கும். அதாவது அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொது பிரச்சனையில் தலையிட்டு அந்த பிரச்சனையை சரி செய்வதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இதனால் பிரபல்யம் ஆகலாம். இதன் மூலம் பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திற்கும் பணிந்து போக வேண்டும். வீம்பு பிடித்துக் கொண்டு நிற்கக்கூடாது. பெரியவர்கள் ஒரு விஷயத்தை சொன்னால் அது நல்லதுக்கு தான் என்று நம்புங்கள். காரியம் பெருசா, வீரியம் பெருசா என்ற கேள்வி உங்களுக்கு வந்தால் இன்னைக்கு காரியத்தில் தான் நீங்கள் குறியாக இருக்க வேண்டும். யார் காலில் விழ சொன்னாலும் யோசிக்காதிங்க பட்டுனு விழுந்துடுங்க.

- Advertisement -