இன்றைய ராசிபலன் – 23 மார்ச் 2024

Rasi-palan-new23
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். எதிரிகளை எல்லாம் சரிகட்டும் அளவுக்கு திறமையாக செயல்படுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத பண வரவு மனநிறைவை கொடுக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். விரிசல் விழுந்த கணவன் மனைவி இருவருக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வாரா கடன் வசூலாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்ற வாழ்க்கையை சகித்துக் கொள்வீர்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு எவ்வளவுதான் பிரச்சனைகளை கொடுத்தாலும், பொறுத்துப்போகும் மனப்பக்குவம் இருக்கும். பூமாதேவியை போல அமைதியாக இருக்கக்கூடிய உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். குழப்பமான மனநிலை, தெளிவு பெறும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று காலை நேரம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தொடங்கினாலும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மதிய நேரத்திற்கு பிறகு உங்களுடைய சுறுசுறுப்பான நாள் தொடங்கிவிடும். புத்திசாலித்தனத்தோடு திறமையாக எல்லாம் வேலையையும் முடித்து விடுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீட்டை செய்யலாம். நண்பர்கள் இடத்திலும் உறவினர்கள் இடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். இந்த நாள் இறுதியில் புதுசாக எதையாவது நிச்சயம் சாதித்திருப்பீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று மனதில் குழப்பத்தோடு இருப்பீர்கள். காலை முதலே உங்களுடைய வேலையில் சின்ன பின்னடைவு இருக்கும். இதனால் சரியான நேரத்தில் சொன்ன வேலையை முடித்து தர முடியாத சூழ்நிலை உண்டாகும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். கூடுமானவரை இன்று குழப்பத்திலிருந்து வெளிவர பாருங்கள். வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். குறிப்பாக உறவுகளோடு கவனமாக பேச வேண்டும். வாழ்க்கைத் துணையோடு நல்லுறவு பழகுங்கள். அவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள், தாய்மாமன் வழி உறவால் சொத்து பிரச்சனை வரலாம். கோர்ட்டு கேஸ் வழக்குகளை நாளை தள்ளிப் போடவும். அரசாங்கத்துக்கு புறம்பான வேளையில் ஈடுபட வேண்டாம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று சிந்தித்து செயல்பட வேண்டும். அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அடுத்தவர்கள் சொல்லுவதை கேட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. குடும்பம் சம்பந்தப்பட்ட ரகசியமான விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கமிஷன் தொழில் ஓஹோ என செல்லும். கலைஞர்களுக்கு இன்று ஒரு சாதனை நிறைந்த நாளாக இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் ஆலோசனையை கேட்கவும். புதிய முதலீட்டை பற்றிய சிந்தனையை இன்று கைவிடவும். கடன் வாங்க வேண்டாம். நிதி சம்பந்தப்பட்ட பரிமாற்றத்தில் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் உங்கள் உடமைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணம் நன்மையை தரும். லேசாக அலைச்சல் இருந்தாலும் முயற்சி செய்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். மேலதிகாரிகளிடம் பெயரும் புகழும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும் என்பதை சில அனுபவ பாடங்களின் மூலம் புரிந்து கொள்வீர்கள். இதனால் வாழ்வில் முன்னேற்றமும் இருக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளால் பிரச்சனை வரக் கூடிய நாளாக இருக்கும். நண்பர்கள் கூட உங்களுக்கு சாதகமாக பேச மாட்டார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகுவீர்கள். கவலைப்படாதீங்க, இன்று தவறு என்று நினைப்பது, நாளை சரியாக மாறலாம். இன்று சரி என்று தெரிவது, நாளை தவறாக மாறலாம். இதற்காக இந்த உலகத்தில் கஷ்டப்படும் மனிதர்கள் முட்டாள்கள் வரிசையில் சேர்க்கப்படுவார்கள். நீங்கள் யாரைப் பற்றியும் கவலைப்படாதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் கொஞ்சம் குறைவாக காணப்படும். வேலையில் பின்னடைவு உண்டாகும். சோம்பேறித்தனத்தோடு இருப்பீங்க. கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் பார்ட்னரை முழுசாக நம்பாதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். மனநிம்மதியோடு உங்களுடைய வேலையை செய்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பொறாமை குணம் கொண்டவர்களுடைய பார்வை உங்கள் மீது விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக சொந்த விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர வேண்டாம்.

- Advertisement -