இன்றைய ராசிபலன் – 23 நவம்பர் 2022

today rasipalan nov 23 2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. சுபயோக பலன்களை கொடுக்கும் இந்த நன்னாளில் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அனாவசியமாக எவரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பு உயர்வை கொடுக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு விஷயத்தையும் செய்யக்கூடாது. பொறுமை மிக மிக அவசியமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் உங்களுடைய பங்களிப்பை கூடுதலாக கொடுப்பது முக்கியம். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் குடைசல் இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வம்பு உங்களைத் தேடி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் அசதி ஏற்படலாம்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை பற்றிய புரிதல் மற்றவர்களுக்கு சரியாகவே புரிந்துணர்வு பெற இருக்கிறது. இதுவரை நீங்கள் ஏங்கிய ஒரு விஷயம் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு கூடுதல் சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களுடன் இருந்து வந்த மன கசப்புகள் மாறும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வெற்றி வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கணிப்புகள் சரியாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதித்து காட்டுவீர்கள். சுய தொழிலில் இருக்கக்கூடிய லாபம் திருப்திகரமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகபூர்வ முடிவுகளில் அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை விட புதிய விஷயங்களை அனுபவ பூர்வமாக உணர இருக்கிறீர்கள். எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் கவனமுடன் இருக்க வேண்டும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்திகளை பெறலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பண விரயம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு படபடப்பு இருக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. தேவையில்லாதவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதிகரித்து காணப்படும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகன ரீதியான பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்பதால் சமயோஜிதமாக செயல்படுவது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கப்போகிறது. எதிர்பாராத வகையில் திடீர் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உண்டு.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு சண்டை சச்சரவுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் அகலும்.

- Advertisement -