இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2022

today rasi palan 24/07/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எவரையும் நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளை தள்ளி வையுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமயோஜித புத்தி தேவை. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை அவசியம் ஆகும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாதிக்கும் வல்லமை பிறக்கும். துணிச்சலுடன் எந்த ஒரு முடிவையும் எடுப்பீர்கள். சுபகாரிய தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்வது நல்லது. அலட்சியம் தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. காலம் தாழ்ந்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான ஏற்றம் அதிகரித்து காணப்படுகிறது. வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாட்டின் மீது அதிக ஆர்வம் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிப்பதை காணலாம்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முன் யோசனையுடன் எந்த ஒரு விஷயத்தையும் அணுகுவது நல்லது. செய்துவிட்டு பிறகு நொந்து கொள்ளக்கூடாது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும் வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்பத்துடன் நேரத்தை அதிகம் செலவிடுவீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் பிறக்கும் அற்புதமான நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் விட்டுக் கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் அதிர்ஷ்டம் உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இதுவரை புரிந்து கொள்ளாத உறவுகள் புரிந்து கொள்ள செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முடிவுகள் மற்றவர்களுக்கு அனுகூல பலன் தரும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். எதிலும் முன்னேற்றம் இருக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். எதையும் சாமர்த்தியமாக கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசு வழி காரியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புது பொலிவுடன் காணப்படுவீர்கள். இதுநாள் வரை இருந்து வந்த மன இறுக்கம் தளரும். சுபகாரிய தடைகள் விலகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறலாம். கணவன் மனைவி உறவுக்கு இடையே விரிசல் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்பத்துடன் வெளியிட பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -