இன்றைய ராசிபலன் – 25 ஜனவரி 2024

Rasi-palan-new25
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முருகனின் அருள் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். பொறுமையாக இருக்கவும். எந்த ஒரு விஷயத்திற்கும் உணர்ச்சி வச படாதீங்க. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அடுத்தவர்களை புரிந்து கொள்ளாமல் அனாவசியமாக பேசுவதை இன்று குறைத்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முருகனின் அருள் கிடைக்க காலையில் எழுந்தவுடன் ஓம் முருகா, ஓம் முருகா, என்ற மந்திரத்தை சொல்லுங்கள். இன்றைய நாள் உற்சாகமாக தொடங்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். முடிந்தால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்கள் கையால் ஒருவருக்கு வயிறார இன்று சாப்பாடு போடுங்கள். குடும்பத்திற்கு பெரிய புண்ணியத்தை சேர்த்த பலன் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று பூஜை அறைக்குச் சென்று அரோகரா என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டு, உங்களுடைய நாளை தொடங்குங்கள். இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த மாலாக இருக்கும். முருகனின் அருள் ஆசி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கையில் கொடுத்த வேலையில் மட்டும் கவனம் இருக்கட்டும். கேலி கிண்டலை பொழுதுபோக்காக வைத்திருப்பவர்கள் இன்று கவனமாக இருக்கணும். அடுத்தவர்கள் மனது புண்படும்படி பேசக்கூடாது.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று பூஜை அறையில் முருகப்பெருமானை நினைத்து ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை சொல்லுங்க. சஞ்சலங்கள் எல்லாம் நீங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்கள் இன்று முருகனை நினைத்து சாப்பிடாமல் விரதம் இருந்தால் கூடிய சீக்கிரத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக மாற வேண்டுமா. வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு போய் நெய் விளக்கு ஏற்றிவிட்டு வாருங்கள். முருகப்பெருமானின் அருள் ஆசியால் இன்று வரக்கூடிய தடைக்கற்கள் எல்லாம், படி கற்களாக மாறும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். தொழிலில் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை நினைத்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம் நிச்சயம் லாபம் இரட்டிப்பாகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று ஓம் முருகா என்ற மந்திரத்தை சொல்லி உங்களுடைய நாளை தொடங்குங்கள். வீட்டில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தொடங்கலாம். மஞ்சள் நிற ஆடையை அணிவது இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். செய்ய முடியாத காரியத்தை, நிறைய முறை முயற்சி செய்த தோல்வி அடைந்த காரியத்தை,  இன்று முருகனை நினைத்து செய்தால் வெற்றி நிச்சயம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசி காரர்கள் தூங்கி எழுந்தவுடன் முருகப்பெருமானின் முகத்தில் விழித்து ஓம் சரவணபவ மந்திரத்தை சொல்லி இன்றைய நாளை தொடங்கிப் பாருங்கள். துன்பமெல்லாம் விலகிவிடும். முருகனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கிக் கொடுத்து வழிபாடு செய்யுங்கள். உங்கள் கடன் சுமையெல்லாம் குறையும். சந்தோஷம் இரட்டிப்பாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் இன்று கூடுதல் கவனம் வையுங்கள். முருகன் கோவிலில் 11 ரூபாய் உண்டியலில் போடுங்க வீண் விரைய செலவு குறையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பூஜை அறையின் முருகரைப் பார்த்து ஓம் சுப்ரமணியனே போற்றி போற்றி என்ற நாமத்தை சொல்லுங்கள். உங்களுக்கு நிறைவான ஆரோக்கியம் கிடைக்கும். சந்தோஷம் பெருகும். குடும்ப கஷ்டம் தீரும். வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு உங்கள் கைகளால் முல்லைப் பூக்களை வாங்கிக் கொடுத்தால் சிறப்பு. வியாபாரத்திலும் அலுவலக வேலையிலும் இன்று எந்த பிரச்சினையும் இருக்காது சுமூகமாக செல்லும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய நாளை சந்தோஷமாக தொடங்கி விடுவீர்கள். ஆன்மீகம் சார்ந்த வழிபாடு உங்களை சுறுசுறுப்பாகிவிடும். வீட்டு பக்கத்தில் இருக்கும் மலை சார்ந்த மிருகப் பெருமானே தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் செய்யுங்கள். வீட்டிலிருந்து படியே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற நாமத்தை சொல்லி பூஜையறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று இரண்டு மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றிவிட்டு வாருங்கள். மனதில் நினைத்த வேண்டுதல் நிறைவேறும். வீட்டில் இருக்கும் சுபகாரிய தடைகள் விலகும். ஆரோக்கியம் கிடைக்கும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் உங்களால் முடிந்த அன்னதானத்தை இல்லாதவர்களுக்கு செய்யவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் தீர இன்று முருகப்பெருமானின் பாதங்களை பற்றிக் கொள்வதுதான் ஒரே வழி. முருகா முருகா முருகா என்ற நாமத்தைச் சொல்லி இன்றைய நாளை தொடங்குங்கள். தடைகள் எல்லாம் விலகி ஓடிவிடும். தோல்விகள் எல்லாம் கூட வெற்றிகளாக மாறிவிடும். வெற்றி கடவுள் அல்லவா முருகன். அவன் நாமத்தைச் சொல்லி வழிபாடு செய்ய மறக்காதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த முருகப்பெருமானே மனித ரூபத்தில் வந்து உங்களுக்கு இன்று ஆசியை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கவலையே படாதீங்க. உங்கள் வாயால் இன்று ஒரு முறை பழனி பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா என்ற வார்த்தையை சொல்லிவிட்டு முயற்சிகளை மேற்கொண்டு பாருங்கள். எல்லாம் வெற்றி தான். சகலாகலா வல்லவனாக இன்று நீங்கள் வலம் வருவீர்கள்.

- Advertisement -