இன்றைய ராசிபலன் – 25 மார்ச் 2022

today rasi palan 25/03/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பழைய நினைவுகளை அசை போடுவீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதலாக கவனமுடன் செயலாற்றுவது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் மேலோங்கும். பண ரீதியான விஷயத்தில் மூன்றாம் மனிதர்களை நம்பாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத பண உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொலை தூர இடங்களில் பிரயாணம் செய்யும் பொழுது விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கடமையில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பதால் நேர்மறையான அணுகுமுறை இருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனித்து கொள்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் சந்திக்கலாம். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு டென்ஷன் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உற்ற நண்பர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சற்றும் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் உங்களை திக்குமுக்காட செய்யும். தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய செய்திகள் சாதகமாக அமையும். சுய தொழிலில் உள்ளவர்கள் இதுவரை ஏற்பட்ட நஷ்டத்தை சீர் செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு மன குழப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்கும் முன் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த சிறுசிறு சண்டை சச்சரவுகள், மன கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நட்பு வட்டத்தை மேலும் விரிவாக்கி கொல்ல முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் விலக கூடிய வழி தென்படும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து கொள்வது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாமல் இருப்பது உசிதம். தொலை தூர இடங்களில் இருந்து வரக்கூடிய செய்திகளுக்கு காத்திருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் கழிக்க கூடிய நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுய தொழிலில் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறைமுக எதிரிகளின் தொல்லை மேலும் வலுவாக வாய்ப்புகள் உண்டு. எச்சரிக்கையுடன் எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பொறுமை தேவை. சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும்.

- Advertisement -