இன்றைய ராசிபலன் – 31 ஜூலை 2022

today rasi palan 31/07/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதைத் தொட்டாலும் அது பொன்னாகும் இனிய நாளாக இருக்க போகிறது. மனதால் யோசிப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடலளவு இருக்கும் கவலையும் பணி அளவு மாறும் அற்புதம் நடக்கும். சுய தொழில் ஏற்றம் காணும். ஆரோக்கியம் வளமாகும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம் எனினும் பொறுமையுடன் காத்திருப்பது நல்லது. கவலைகள் தீர்ந்து மனதில் புது தெம்பு பிறக்கும். உத்தியோகத்தில் உள்ள நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் சரியான புரிதல் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் பொறுப்புணர்வு தேவை. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பல குறைந்து மன நிம்மதி ஏற்படும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடந்த கால நினைவுகளை அசை போட்டு பார்க்கக்கூடிய வாய்ப்பு உண்டு. தேவையற்ற எண்ணங்களை மனதில் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள். நினைத்ததை அடையக் கூடிய யோகம் உண்டு.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு முயற்சிகளும் பாராட்டுக்கு உரியதாக இருக்கப் போகிறது. தொலைதூர இடங்களில் இருந்து சுபச் செய்திகளை பெறலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாகும் என்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சூழ்நிலை அறிந்து வார்த்தைகளை விடுவது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கூட்டு முயற்சி வெற்றிகரமான பலன்களை கொடுக்க இருக்கிறது. கடமையில் கூடுதல் அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பால் உயரக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணிகளின் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த செயல் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். சமூகத்தின் மீது அக்கறை அதிகரித்து காணப்படும். தொலைதூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன உளைச்சல் நீங்கி மகிழ்ச்சி பிறக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. நீங்கள் நினைத்ததற்கு எதிர்மாறாக சில விஷயங்கள் நடக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சி வெற்றி தரும் அமைப்பாக இருக்கிறது. எடுக்கும் காரியத்தில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க இறைவழிபாட்டை மேற்கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல்நிலை அதிகாரிகளின் ஆதிக்கம் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட செய்யலாம்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் எடுத்து வந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும் இதனால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது தன்னம்பிக்கை பிறக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும், வெற்றி வாய்ப்புகள் பெருகும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு முடிவையும் உடனுக்குடன் எடுப்பது நல்லது. இது செய்தால் சரியாக வருமா? என்று யோசித்துக் கொண்டே இருந்தால் இருக்கும் நேரமும் வீணாகிவிடும். கணவன் மனைவி ஒற்றுமையில் புரிதல் தேவை. சுயதொழியில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட கூடிய வழிகள் பிறக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பம் நீடிக்கும் எனவே அவசரப்படாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில சமயங்களில் அசௌகரிமான உணர்வு ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவு பெருகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுதந்திரமாக செயல்பட கூடிய அமைப்பு உண்டு.

- Advertisement -