இன்றைய ராசி பலன் – 04-07-2021

rasi palan - 4-7-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்றவர்களிடம் வாய்விட்டு வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். கணவன் மனைவி சண்டை முடிவுக்கு வரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். மற்றும் வியாபாரத்தில் கடின உழைப்புக்கு பலன் தரும் நாளாக இருக்கும். கருத்து மோதல்களை தவிர்ப்பது உத்தமம்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் உழைப்பு செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்து வைக்கும் அடியில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகளும் பலிக்கும் யோகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் அக்கறை கொண்டு இருப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை தரும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்தினருடன் செலவிடக் கூடிய தருணமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் உண்டாகும். பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காணலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி சட்டென உயரக் கூடிய வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களிடம் இருந்து சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவை மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும் நாளாக இருக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் நினைத்த காரியத்தை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலவி வந்த போட்டிகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்த உற்சாகத்தை ஏற்படுத்தும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் நாளாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க ஆடம்பரத்தை தவிர்ப்பது உத்தமம்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் முடிவுகள் எடுக்கும் முன்பு நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது. பொருளாதார ஏற்ற இறக்கத்தை திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சாற்றலால் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களை மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். ஊதிய உயர்வு கிடைப்பதற்கான யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளுக்கு உரிய பலன்களை காணலாம். உங்களை சுற்றியுள்ள பகைவர்களின் தொல்லைகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -