இன்றைய ராசி பலன் – 5-06-2021

rasi palan - 5-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலம் பற்றி நீங்கள் தீட்டிய திட்டமிடல் சிறப்பாக முன்னேற்றம் அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய வாகனங்களால் தொந்தரவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நண்பர்களால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் நம்பிக்கைக்கு உரிய விதமாக உங்களிடம் நடந்து கொள்வார்கள். புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் வளர்ச்சியின் மேல் தளர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு வழி காரியங்களில் அனுகூல பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்கு இன்னும் கூடுதலாக செலுத்தினால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வளர்ச்சி கருதி எடுக்கும் முடிவுகள் சாதகமான பலன்களைக் கொடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுமானவரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறரிடம் வாக்கு கொடுப்பதில் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய வளர்ச்சியை கண்டு மற்றவர்கள் வியப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது வரை இருந்து வந்த பகை தீர கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவேண்டிய பாக்கிகள் வசூலாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் கொடுக்கும் முழு முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் சிறப்பாக நிறைவேறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பொறுப்புகளை ஏற்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய நாணயத்தை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் இறைவழிபாட்டின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பாதைகள் தெரியக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் வளர்ச்சி கருதி எடுக்கும் முடிவுகள் அனுகூல பலன்களை கொடுக்கும். புதிய யுத்திகளை கையாள்வது நல்ல பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உற்றார் உறவினர்களுடன் இருந்து வந்த பகை மாறும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவிக்கரம் உற்சாகத்தை அளிக்கும். ஒற்றுமை ஓங்கி காணப்படும். கணவன் மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாமர்த்தியமான நடவடிக்கைகளால் நல்லது நடக்கும். எடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்கிற முனைப்பு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் இதுவரை நிலவி வந்த குழப்பங்கள் தீர கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பகை மாறும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -