பச்சைக் கற்பூரத்தை வீட்டில் இப்படி ஏற்றி வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி அனைத்தும் இந்த நெருப்போடு பொசுங்கிப் போகும்.

pachai-karpooram-vilakku
- Advertisement -

வீட்டிலிருக்கும் கெடுதலை கண்திருஷ்டியை கெட்ட சக்தியை விரட்டியடிக்க ஆன்மீக ரீதியாக தாந்திரீக ரீதியாக நமக்கு எத்தனையோ பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. சில பரிகாரங்களை நாம் முயற்சி செய்து பார்த்திருப்போம். ஆனால் அதன் மூலம் நமக்கு பலன் முழுமையாக கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பலன் தரக்கூடிய சுலபமான கல்லுப்பு பச்சை கற்பூர பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சில நாட்களாக வீட்டில் நடப்பது எதுவுமே சரியில்லை. ஏதோ கெட்ட சகுனம் போலவே இருக்கின்றது. நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த கணவருக்கு வேலை போய்விட்டது. நன்றாக படித்து கொண்டிருந்த குழந்தை இப்போது சோம்பேறித்தனத்தோடு படிக்காமல் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை என்பவர்கள் பின் சொல்லக் கூடிய பரிகாரத்தை ஒருமுறை செய்து பார்க்கலாம்.

- Advertisement -

பொதுவாகவே குடும்பத்தில் கஷ்டம் என்றால் முதலில் நாம் செய்ய வேண்டிய விஷயம் குலதெய்வ வழிபாடு. இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு முடிந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். இல்லை என்றால் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து குலதெய்வ படத்திற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்து குலதெய்வத்திற்காக தனியாக ஒரு பூஜை செய்து விடுங்கள்.

அடுத்து வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்ற பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு எச்சில் படாத தட்டில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டு நன்றாக பரப்பி விடுங்கள். தேவைப்பட்டால் இன்னொரு கைப்பிடி கல் உப்பும் சேர்த்துக் கொள்ளலாம். தட்டு தெரியாத அளவிற்கு கல்லுப்பை பரப்பி நிரப்பி விட்டு அதன் மேலே ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து இறைவனை மனதார வேண்டி அந்த பச்சை கற்பூரத்தை ஏற்றி விடுங்கள்.

- Advertisement -

பச்சைக் கற்பூரம் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும்போது அந்த தட்டை அப்படியே தூக்கி உங்களுடைய கையில் பிடித்துக் கொள்ளுங்கள். சுட்டுக் கொள்ளாமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். உப்பின் மேலே பச்சைக் கற்பூரம் எரியும்போது உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி இந்த பிரபஞ்சத்தை நினைவில் கொண்டு, உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் கண் திருஷ்டி கெடுதல் எல்லாம் விலகி செல்ல வேண்டும் என்று ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். மனதை அலைபாய விடாதீர்கள். மனதை ஒருநிலைப்படுத்தி இந்த பிரார்த்தனையை செய்ய வேண்டும்.

ஒரு ஐந்து நிமிடங்கள் வரை அந்த பச்சை கற்பூரம் எரியும் அல்லவா. ஐந்து நிமிடங்கள் இந்த பிரார்த்தனையை செய்தால் போதும். கற்பூரம் அணிந்த பின்பு உங்கள் கையில் தட்டில் இருக்கும் உப்பை ஒரு ஜக்கில் தண்ணீரில் கொட்டி விடுங்கள். சிறிது நேரத்தில் அந்த உப்பு கரைந்து விடும். தண்ணீரை தொடாமல் அப்படியே பக்கெட்டோடு அல்லது ஜக்கோடு கொண்டுபோய் வீட்டிற்கு வெளியே இந்த தண்ணீரை ஊற்றி விடுங்கள்.

அவ்வளவு தான். வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து 3 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து வரவேண்டும். வெள்ளி செவ்வாய் தவிர மற்ற கிழமைகளில் இந்த பரிகாரத்தை எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் எந்த கிழமையில் இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ அடுத்து இரண்டு வாரமும் அதே கிழமையில் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.

இப்படி செய்யும்போது உங்களுடைய வீட்டில் இருக்கக் கூடிய கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு கெடுதல் உங்களை விட்டு நீங்கிவிடும். நீங்கள் இழந்த சந்தோஷத்தையும் நிம்மதியையும் திரும்பவும் பெறுவதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். நெகட்டிவ் எனர்ஜியை அகற்றுவதற்கு கல் உப்பைத் தவிர சிறந்த வேறு ஒரு பொருள் நிச்சயம் கிடையாது.

- Advertisement -