நினைத்தது நடக்க, வேண்டியது கிடைக்க உப்பு வழிபாடு

mahalakshmi uppu
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நாம் முதலில் வணங்கக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் நம்முடைய குலதெய்வம். அடுத்ததாக நம்முடைய விருப்ப தெய்வமான இஷ்ட தெய்வம். இப்படி இவர்கள் இருவரின் அருளையும் நாம் பரிபூரணமாக பெற்றுவிட்டால் நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படி இருந்தும் ஒரு சிலருக்கு அவர்கள் நினைத்த காரியம் நடைபெறாத ஒரு சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான உப்பு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

உப்பு பரிஹாரம்

மகாலட்சுமி தாயாரின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்து விட்டால் அவருக்கு எந்தவித குறைவும் இருக்காது. அப்படிப்பட்ட மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது தான் கல் உப்பு. கல் உப்பு பல பரிகாரங்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் பயன்படக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட கல் உப்பை வைத்து நாம் வேண்டிய வரத்தை பெறுவதற்கு எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய ஆரம்பிக்க வேண்டும். காலையிலேயே எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்துக் கொள்ளுங்கள். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இதற்கு புதிதாக வாங்கிய மன்னால் செய்யப்பட்ட தட்டோ, அகலமான கிண்ணமோ அல்லது ஒரு அகல் விளக்கு ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அது நிறைய கல்லுப்பை கொட்ட வேண்டும். இந்த கல் உப்பு புதிதாக வாங்கியதாக இருக்கட்டும். சமையலுக்கு பயன்படுத்தியதாக இருக்கக் கூடாது.

அந்த மண் பாத்திரத்திற்கு மஞ்சள் குங்குமம் வைக்க மறந்து விடாதீர்கள். இப்பொழுது சுத்தமான மஞ்சளை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதில் பன்னீரை ஊற்றி அதை நன்றாக கெட்டியாக பிணைந்து கொள்ளுங்கள். இப்பொழுது இதை ஒரு சிறுவடையாக தட்டி அதை எடுத்து கல் உப்பின் நடுவில் வைக்க வேண்டும். அதற்கு மேல் தாழம்பூ குங்குமத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சாமந்தி மற்றும் சம்பங்கி மலர்களை வைத்து கல்லுப்பின் மீது மஞ்சளை சுற்றி இந்த மலர்களை வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வைத்து விட்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை உங்களுடைய குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை நினைத்தவாறு இந்த கல்லுப்பிடம் நீங்கள் கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு பச்சை கற்பூரத்தை வைத்து தீப ஆராதனை காட்ட வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் கல்லுப்பை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நாம் கல்லுப்பிடம் கேட்ட எந்த காரியமாக இருந்தாலும் அந்த காரியம் விரைவில் நடைபெறும்.

இந்த கல் உப்பில் இருக்கக் கூடிய மலர்களை தினமும் மாற்ற வேண்டும். இதை தனியாக ஒரு கவரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வாதத்திற்கு ஒரு முறை அதாவது வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பையும் மாற்ற வேண்டும். பழைய கல் உப்பையும் ஒரு கவரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 48 நாட்கள் நிறைவடைந்த பிறகு இந்த பழைய கல் உப்பையும் பழைய மலர்களையும் எடுத்துக்கொண்டு போய் ஓடுகின்ற நீரில் போட்டுவிட்டு வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே:இழந்ததை திரும்ப பெற மந்திரம்
மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பை இந்த முறையில் நம்முடைய வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவதன் மூலம் நாம் நினைத்தது நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -