எல்லாரையும் விட வேகமாக பணக்காரராக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குதா? அதிவிரைவாக பணக்கார யோகத்தை பெற்று தரும் அகல் தீப வழிபாடு.

cash-deepam-vilakku
- Advertisement -

வாழையடி வாழையாக உங்கள் குடும்பத்திற்கு பண கஷ்டம் வரக்கூடாது. குடும்பம் செழிப்போடு சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும். பணம் காசு என்பது மூட்டை மூட்டையாக கிடைக்கவில்லை என்றாலும், நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு அளவோடு வருமானம் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்காக ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்யலாம். அருமையான சக்திவாய்ந்த சுலபமான ஒரு தீப வழிபாட்டைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

money1

எல்லோரையும் விட வேகமாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை நம் மனதில் இருந்தால் மட்டும் போதாது. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள உண்மையாக, நேர்வழியில் கடின உழைப்பை முதலீடாகப் போட வேண்டும். உங்களுடைய உழைப்புக்கு, கஷ்டத்திற்கு ஏற்ற பலன் விரைவாக கிடைக்க இந்த பரிகாரம் உங்களுக்கு துணையாக இருக்கும்.

- Advertisement -

கிழிசல் இல்லாத தலை வாழை இலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வாழை இலையை உங்கள் வீட்டு வரவேற்பறையில் நடுவே போட்டுக்கொள்ள வேண்டும். அதில் ஒரு மண் அகல் விளக்கை வைத்து சுத்தமான பசு நெய் ஊற்றி, தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். இந்த மண் அகல் தீபத்திற்கு பக்கத்தில் ஒரு வாழைப் பூவை வைத்துவிடுங்கள்.

vazhai maram

தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு குல தெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பண கஷ்டம் என்பது வரக்கூடாது. மன கஷ்டம் வரக்கூடாது. நோய்நொடிகள் இருக்கக்கூடாது. சந்தோஷமாக குடும்பம் தழைத்தோங்க வேண்டும் என்று. அதன்பின்பு அந்த தீபம், அகல் விளக்கில் இருக்கும் நெய் தீரும் வரை எரியட்டும்.

- Advertisement -

தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது நீங்கள் உங்களுடைய வேலையை எப்போதும் போல பார்க்கலாம். தீபம் குளிர்ந்த பின்பு வாழை இலையை எடுத்து பசுமாட்டிற்கு போட்டுவிட வேண்டும். வாழைப்பூவை முடிந்தால் யாருக்கேனும் தானமாக கொடுங்கள். இல்லையென்றால் இந்த வாழை பூவையும் பசுமாட்டிற்கு சாப்பிட கொடுத்து விடலாம்.

vaazhai-poo

இந்த தீபத்தை தொடர்ந்து 21 நாட்கள் உங்கள் வீட்டில் ஏற்றவேண்டும். தினம்தோறும் வரக்கூடிய சுக்கிர ஓரையில் ஒரு மணி நேரம் இந்த தீபம் உங்களுடைய வீட்டில் எறிய வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பு உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த தீபம் எரியும் போது உங்களுடைய வீடு கமகமவென்று நறுமணத்துடன் இருக்க வேண்டும். இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

deepam2

இருபத்தி ஒரு நாட்கள், இருபத்தி ஒரு வாழை இலை, இருபத்தி ஒரு வாழை பூ, வாங்க வேண்டியதாக இருக்கும். ஒரே ஒரு மண் அகல்விளக்கு இருபத்தொரு நாட்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தீப வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்தால், நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்து வரக்கூடிய பண கஷ்டத்திற்கு நிச்சயமாக ஒரு விடிவு காலம் பிறக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -