இந்தப் 2 பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். தெய்வம் தானே விரும்பி உங்கள் வீடு தேடி வரும்.

shivan
- Advertisement -

முயற்சி இருந்தும் முன்னேற்றமில்லை. திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லை. எதற்காக இந்தக் கஷ்டங்கள்? நமக்கு தெய்வத்தின் அருள் இருக்கின்றதா? இல்லையா? வீட்டில் கெட்ட சக்தி குடிகொண்டிருக்கிறதா? எதனால் தொடர் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன? நாம் இறைவன் மீது அதிக பக்தி வைத்திருப்பதால் அவர் நம்மை சோதித்துப் பார்க்கிறாரா? இவ்வாறு நம்மில் பலரும் பல விதமாக புலம்பிக்கொண்டே தான் இருக்கின்றோம். வீட்டில் தெய்வம் குடி கொண்டிருந்தால் இருக்கும் பிரச்சனைகளில் பாதி தீர்ந்து விடும். அவ்வாறு தெய்வம் குடி கொள்ள வீட்டில் இருக்கவேண்டிய இரு முக்கிய பொருட்களைப் பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

valamburikai

அந்தக் காலத்திலேயே நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருந்த அபூர்வமான விஷயங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு காய் வகையைச் சேர்ந்தது. இதனை வலம்புரிக்காய், இடம்புரிக்காய் என்று சொல்வார்கள். இந்த இரண்டு காய்களையும் வாங்கி அதனை மஞ்சள் நீரில் கழுவி அதற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து நிழலில் உலர்த்த வேண்டும். வீட்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி இருவரில் எவரேனும் ஒருவர் அந்த காய்களை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
இரண்டு கைகளையும் கூப்பி ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் சிவபெருமானை நினைத்து ‘ஓம்’ எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

பொதுவாகவே ஓம் என்று சொல்லப்படும் ஒலிக்கு அதிக சக்தி உள்ளது. இந்த ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் சக்தியை உள்வாங்கும் ஆற்றல் இந்த காய்களுக்கு உள்ளது. எவ்வளவு முறை ஓம் எனும் மந்திரத்தை உச்சரித்து அந்த காய்களுக்கு சித்தி ஏற்றுகிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் தெய்வசக்தி உங்கள் வீட்டில் குடிகொள்ளும். நீங்கள் உச்சரித்த மந்திரத்தை உள்வாங்கிய காய்கள் ஓம் என்பதனை எப்போதும் உங்கள் வீட்டில் ஒலித்திருக்க செய்யும். இதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அனைத்தும் விலகிவிடும்.

praying-god1

அதன் பிறகு உங்கள் கையில் உள்ள காய்களை கண்ணாடி அல்லது மரத்தினால் ஆன டப்பாவில் வைத்து அதனுடன் இரண்டு சிறிய பச்சை கற்பூரம் சேர்த்து அதனை ஒரு வெண்ணிறத் துணியினால் மூடி வீட்டில் உள்ள பீரோ அல்லது பூஜை அறையில் பத்திரமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டில் தினந்தோறும் பூஜை செய்யும்பொழுது காய்கள் வைத்திருக்கும் டப்பாவிர்க்கும் தீப, தூப ஆராதனை காண்பித்து வணங்கி வருதல் வேண்டும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வலம்புரி மற்றும் இடம்புரி காய்களை கைகளில் வைத்துக் கொண்டு ஓம் எனும் மந்திரத்தை உச்சரித்து வரவேண்டும். நீங்கள் உச்சரிக்கும் மந்திரமே இதற்கு மகா சக்தியை அளிக்கிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ இந்த காய்களை மாற்றி புதியதாக வைக்க வேண்டும்.

murugan-om

இந்தப் பதிவில் உள்ள கருத்தினை முழுமனதாக ஏற்றுக் கொண்டவர்கள் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களை சுற்றி எப்போதும் நேர்மறை சூழலே நிலவியிருக்கும்.

- Advertisement -