வாராகி அருள் பெற தீப வழிபாடு

varahi agal dheepam
- Advertisement -

வாராகி அன்னை வழிபாடு என்றாலே அது பஞ்சமி திதி தான். இது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான். இந்த பஞ்சமி திதியானது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த பஞ்சமி திதியானது இன்று மாலை 6:20 க்கு துவங்கி நாளை சனிக்கிழமை மாலை 6.30 மணி வரை உள்ளது இந்த இரண்டுமே அன்னையை வழிபட உகந்த நாள்.

இதில் வெள்ளிக்கிழமை அன்னையை வழிபாடு செய்ய நினைப்பவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் 10 மணி வரை செய்யலாம். சனிக்கிழமை செய்பவர்கள் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குள்ளாக வழிபாடு செய்து முடித்து விடுங்கள். இந்த வழிபாட்டை நாம் செய்யும் போது அன்னையின் அருளை பெறுவதோடு கடன் நோய் தீர்ந்து நிம்மதியாக வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அது குறித்த தகவல்களை ஆன்மீகம் பற்றிய இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

வாராகி அன்னையின் அருளை பெற தீபம்

இந்த வழிபாட்டிற்கு நாம் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். அது மட்டும் தான் முக்கியம் அன்னைக்கு உகந்த பஞ்சமுக தீபத்தை அன்று ஏற்ற வேண்டும். அது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

இதற்கு காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலே எழுந்து குளித்து முடித்து பஞ்சமி விரதம் இருப்பவர்கள் விரதம் கடைபிடிக்கலாம் இல்லாதவர்கள் அசைவத்தை தவிர்த்து விட்டு அன்றைய நாள் முழுவதும் அன்னையை மனதார நினைத்து வேண்டிக் எளிமையான உணவு உட்கொள்ளுங்கள்.

- Advertisement -

அன்னைக்கு ஏற்ற கூடிய பஞ்சமுக விளக்கை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அன்னைக்கு ஏதேனும் ஒரு எளிய நெய்வேத்தியத்தை தயார் செய்து கொள்ளுங்கள். அன்றைய தினத்தில் கிழங்கு வகைகளை அன்னைக்கு நெய்வேத்தியமாக வைத்தால் வீட்டில் நோய் நொடிகள் நீங்கும் என்பது ஐதீகம்.

அதே போல் அன்னைக்கு பிடித்த வாசனை மலர்களை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை பூஜையறை, வரவேற்பறை, சமையலறை என எங்கு வேண்டுமானாலும் ஏற்றலாம். ஆனால் தீபம் ஏற்றி வைத்து விட்டு நாம் அந்த தீபத்தை சுற்றிவர வேண்டும். அதற்கு ஏற்றார் போல் இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய தட்டில் முழுவதுமாக வாசனை மலர்களை பரப்பி விட்டு அதன் நடுவில் பஞ்சமுக தீபத்தை வைத்து 5 திரி போட்டு அன்னைக்கு தீபம் ஏற்றுங்கள். அந்த தீபத்தின் முன்பு நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். நெய்வேத்தியத்தை வைத்து சாம்பிராணி தூபம் போட்டு பிறகு அன்னையின் இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.

ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம்

இந்த மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு நீங்கள் ஏற்றி வைத்த பஞ்சமுக தீபத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். அதன் பிறகு இந்த தீபத்தை கொண்டு பூஜை அறையில் வைத்து விடலாம். ஒரு வேளை நீங்கள் பூஜையறையில் இந்த வழிபாடு செய்தால் அங்கேயே இருக்கட்டும். இதன் பிறகு நெய்வேத்தியத்தை பகிர்ந்து உண்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அன்றைய தினத்தில் வீட்டின் அருகில் வாராகி அன்னையின் ஆலயம் இருந்தால் அங்கு நெய் வாங்கி கொடுங்கள் இது உங்களின் கடன் முழுவதும் அடைவதற்குமான வழி ஏற்படுத்தும். வாராகி அன்னை ஆலயம் அருகில் இல்லை என்றால் ஏதேனும் ஒரு அம்மன் ஆலயத்திற்கு வாங்கிக் கொடுக்கலாம் தவறில்லை.

இதையும் படிக்கலாமே:

பஞ்சமி அன்று ஏற்றக் கூடிய இந்த தீபமும் வழிபாடும் நம்முடைய பெரும் பிரச்சனைகளான கடன் தொல்லை நோய் நொடி களுக்கு தீர்வு மன பயம் எதிரி தொல்லை அனைத்தும் நீங்குவதோடு வாராகி அன்னையின் பரிபூரண அருளையும் பெறலாம் இந்த வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறலாம் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -