இன்று வளர்பிறை பஞ்சமி திதி. இன்று மாலை வராஹி அம்மனை நினைத்து வீட்டில் இந்த 1 தீபம் ஏற்றி வைத்தால் கை நிறைய பணம் சேர தொடங்கும். கடன் சுமை குறையும்.

varahi-cash
- Advertisement -

கேட்ட உடனேயே கேட்ட வரங்களை அள்ளித் தரக்கூடிய சக்தி கொண்டவள் தான் இந்த வாராஹி அம்மன். வாராஹி தாயை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும். உக்கிர தெய்வம், பார்ப்பதற்கு பயமாக உள்ளது என்று சொல்லுபவர்கள் எல்லோருமே இந்த வாராகி வழிபாடு செய்து பாருங்கள். குழந்தை உள்ளம் கொண்டவள் இந்தத் தாய் என்பது எல்லோருக்கும் புரிந்துவிடும். இவ்வளவு சிறப்பு அம்சங்களைக் கொண்ட வாராஹி தாய்க்கு சிறப்பான நாள் என்றால் அது பஞ்சமி திதி. இன்றைய தினம் வளர்பிறையில் வந்திருக்கக்கூடிய பஞ்சமி திதி வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய ஒரு சிறு குறிப்பு உங்களுக்காக.

வராகி தாய் பூஜையில் உடல் சுத்தமும், மன சுத்தமும், வீடு சுத்தம் மிக மிக முக்கியம். காலையிலேயே நீங்கள் குளித்து இருந்தாலும் மாலை குளித்து விட்டுத்தான் இந்த பூஜையை செய்ய வேண்டும். அன்னையை வேண்டி செய்யக்கூடிய பஞ்சமி வழிபாட்டை இரவு 8.00 மணிக்கு மேல் செய்வது மிக மிக உகந்த நேரமாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது இரவு 8.00 மணியிலிருந்து 9.00 மணிக்குள் இந்த பூஜையைச் செய்யலாம்.

- Advertisement -

வாராஹியின் திருவுருவப்படம் நிறைய பேர் வீட்டில் இருக்காது. படம் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். ஒரு மஞ்சளில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைப்பதுபோல வாராஹி அம்மனை பிடித்து வைத்து குங்குமப் பொட்டு வைத்து அந்த மஞ்சளை வாராஹி தேவியாக நினைத்துக் கொள்ளுங்கள். இந்த வாராஹி தேவிக்கு பூக்களால் அலங்காரம் செய்து, கொஞ்சமாக சர்க்கரைப் பொங்கல் பச்சை கற்பூரம் சேர்த்து சமைத்து பூஜை அறையில் நிவேதனமாக வைத்து விடுங்கள். இதோடு 1 தம்ளர் பானகம் தயார் செய்ய வேண்டும்.

அதன் பின்பு ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிக்கு மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது பசு நெய் ஊற்றி அதில் இரண்டு ஏலக்காய்களை போட்டு மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்றி வைக்கவேண்டும். முடிந்தால் 5 மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றலாம். ஐந்து விளக்கிலும் ஏலக்காய்கள் போட்டு தீபம் ஏற்றப்பட வேண்டும். ஏனென்றால் பஞ்சமி என்பது ஐந்து என்ற எண் கணக்கை தான் குறிக்கின்றது. ஐந்து விளக்கு, ஐந்து திரி எல்லாம் போட முடியாது என்பவர்கள் ஒரே ஒரு மண் அகல் விளக்கில், ஐந்து திரி போட்டு தீபம் ஏற்றி வாராகி அன்னையின் முன்பு வைக்கலாம். இதுவும் முடியாது என்பவர்கள் ஒரே ஒரு திரி போட்டாவது தீபம் ஏற்றி வையுங்கள்.

- Advertisement -

ஏலக்காய் பணத்தை வசியம் செய்ய கூடிய ஒரு பொருள். வெற்றிலை வெற்றியை மட்டும் தரக்கூடியது. இந்தப் பொருளை போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு வாராகி அன்னையிடம் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வேண்டுதல் வைத்தால், பிரச்சினைகளுக்கு தீர்வு உடனடியாக கிடைக்கும். பணம் தவிர வேறு எந்த பிரச்சினை உங்களுக்கு இருந்தாலும் அதையும் அன்னையிடம் தாராளமாகச் சொல்லுங்கள்.

பூஜையில் அலங்காரங்களை முடித்துவிட்டு வாராகி தாயின் முன்பு அமர்ந்து ‘ஓம் வாராஹி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து இறுதியாக தீப தூப ஆராதனைகள் காண்பித்து, பிரார்த்தனை செய்து பூஜையை நிறைவு செய்துகொண்டு பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடலாம். இவ்வளவு தாங்க. உங்களால் முடிந்த அளவிற்கு மனநிறைவோடு, மனதில் எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு எந்த கேடும் நினைக்காமல் வராஹி அன்னைக்கு பாசமாக என்ன செய்வீங்களோ அதை செய்து பாருங்கள். அவள் பூஜையை ஏற்றுக் கொண்டு, வரங்களை உங்களுக்கு வாரி வாரி கொடுத்து விடுவாள்.

- Advertisement -