அடகு நகை மீட்க, திருஷ்டி கழிக்க, வராத பணம் மீண்டும் திரும்ப வர வீட்டில் செய்யக் கூடிய அற்புத எளிய பரிகாரம்!

gold-vasambu-cash
- Advertisement -

ஒரு சில பொருட்களுக்கு ஒரு சில தன்மைகள் உண்டு என்பது ஆன்மீகத்தின் நம்பிக்கை. எலுமிச்சை பழத்தை மூன்று முறை சுற்றி வீசினால் திருஷ்டிகள் எல்லாம் ஒழிந்து போகும் என்பது நம்பிக்கை. அது போல் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு விதமான ஆற்றல்களை நீக்கக் கூடிய தன்மை உண்டு. அந்த வகையில் இந்த இரண்டு பொருட்களுக்கு வராத பணத்தை திரும்ப வர வைக்கும் ஆற்றல் உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டு கொடுக்கும் மேலும் வீட்டில் இருக்கும் கெட்ட திருஷ்டிகளை கழிக்கும். இத்தகைய அற்புத சக்திகள் வாய்ந்த பொருட்கள் என்ன? அதை என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Today Gold rate

ஒரு சிலருக்கு தங்கத்திற்கும், அவர்களுக்கும் ராசியே இருக்காது. புதிதாக தங்க நகைகள் ஆசை ஆசையாக வாங்கினாலும் அதை கொஞ்ச நாட்கள் கூட உடலில் போட்டு கொண்டு அழகு பார்க்க முடியாது. அதற்குள் அது அடகு கடைக்கு சென்று விடும் படியான சூழ்நிலை வந்துவிடும். ஒரு கடனை அடைக்க ஒரு கடன் என்று ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும் போது தங்கத்தை அடகு வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

- Advertisement -

அடகு வைத்த தங்க நகையை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் அதைக்கூட மீட்க முடியாமல் பல வருடங்களாக கழிந்து கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடிய அற்புத சக்தியும் உண்டு. ஒருவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப வசூலிக்க முடியாத சூழ்நிலையை கூட இந்த பரிகாரம் செய்வதன் மூலம் மாற்றி அமைக்கலாம். நம் வீட்டின் வாசலில் இந்த இரண்டு பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்து கட்டி வைத்தால் போதும்.

padikaram

ஒரு சிகப்பு நிற துணியில் ஒரு துண்டு படிகாரம் மற்றும் ஒரு துண்டு வசம்பு ஆகியவற்றை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு முடிச்சாக கட்டி வாசலில் தொங்க விட வேண்டும். அவ்வளவுதாங்க இதனை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இதனை ஓடும் தண்ணீரில் விட்டு விட்டு, வேறு ஒன்றை மாட்டி வைக்கலாம்.

- Advertisement -

படிகாரம் தண்ணீரை சுத்தம் செய்ய பயன்படுத்துவது உண்டு. கிணறு, தண்ணீர் டேங்க் போன்றவற்றில் படிகாரத்தை போட்டு வைத்தால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் இந்த படிகாரத்தை வீட்டின் வாசலில் கட்டுவதால் வீடும் சுத்தமாகும். நமக்கு வரக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளும் தன்மை இதற்கு உண்டு எனவே நமக்கு ஏற்படும் கெடுதல்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனுடன் வசம்பு சேர்த்து வைக்கும் பொழுது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

thirusti-red-mottai

அந்த காலங்களில் பூச்சிக்கடி, விஷக்கடி போன்றவற்றுக்கு வசம்பை தூள் செய்து வயிற்றுக்குள் கொடுப்பது உண்டு. வாந்தி மூலம் வெளியேறி விஷம் முறிந்து விடும். எனவே இத்தகைய பொருட்களை வீடு, கடை வைத்திருப்பவர்கள், வியாபாரம் செய்யும் இடங்களில் எல்லாம் நீங்கள் இது போல சிகப்பு நிற துணியில் கட்டி வைத்தால் திருஷ்டிகளும் கழியும், நமக்கு வரக்கூடிய கெட்டவைகளும் நீங்கி நல்லவைகள் நடக்கும். இதனை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள், உங்களுக்கும் நினைத்தவை நடக்கும்.

- Advertisement -