வீட்டின் வறுமை நிலையை மாற்றி அதிர்ஷ்டத்தை வீட்டிற்குள் கொண்டு வர இந்த ஒரு மலரை வைத்து பூஜை செய்தால் போதும்

adhirshtam
- Advertisement -

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் பூஜை அறையில் வாசனை மிகுந்த மலர்களை சுவாமி படங்களுக்கும், பூஜை பொருட்களுக்கும் சூட்டி பூஜை செய்து இறைவனை வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு இறைவனுக்கு வாசனை மலர்களை படைப்பது என்பது நமது மனதிற்கு ஒரு திருப்தியை அளிக்கிறது. ஆனால் வாசனையற்ற மலர்களையும் பூஜைக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட ஒரு சில மலர்கள் மட்டும் இருக்கின்றன. அவ்வாறு ஒரு விசேஷமானதும், வாசனை இல்லாததுமான ஒரு மலர் தான் நமக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது. வாருங்கள் அது என்ன மலர் அதனை எவ்வாறு பயன்படுத்தி பூஜை செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

flower-poo

அவ்வாறு வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் அளித்தருளும் ஒரு அற்புத மலர் தான் வெள்ளை எருக்கன் மலர். இந்த வெள்ளெருக்கு மரம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் புதையல் குடிகொண்டிருக்கும் என்று சொல்வார்கள். இதற்கு அர்த்தம் அந்த வீட்டினுள் புதையல் இருப்பது அல்ல. இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அற்புத மருத்துவ குணங்களையும், ஆன்மீக குணங்களையும் தனக்குள் வைத்திருப்பதே காரணமாகும்.

- Advertisement -

இதன் வேர் பகுதியை எடுத்து விநாயகர் சிலை செய்து பூஜித்து வருவது அற்புத சக்தியை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதன் மலரில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படுகிறது. அதுபோல இவற்றின் இலை பகுதியும், தண்டுப் பகுதியும் பலவித ஆன்மீக சக்தியையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. இதன் மலர்களைப் பறித்து விநாயகருக்கு மாலையாக தொடுத்து பூஜை செய்வது நமது வழக்கமாக இருக்கிறது.

vellerukku-pillaiyar

அவ்வாறு ஒரு வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அழிந்து, சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்கவும், அதிர்ஷ்டம் பெருகவும், செல்வம் நிறைந்திருக்கவும் இந்த மலரை வைத்து ஒரு சிறப்பு பரிகாரம் செய்திடல் வேண்டும். அவ்வாறு இந்த மலரின் ஆற்றல் நமது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை அழித்து, நேர் மறை சக்திகளை நமது வீட்டிற்குள் குடி கொண்டிருக்க வைக்கிறது.

- Advertisement -

ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு அதன்மீது வெள்ளெருக்கு மலர்களை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கண்ணாடி குடுவையை வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் கூடத்திலோ மற்றவர்கள் கண் படும் இடத்தில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டிற்குள் வரும் எதிர்மறை சக்திகள் இதன் தாக்கத்தினால் விரட்டப்பட்டு, எதிர்மறை சக்திகள் மட்டுமே நமது வீட்டில் நிலைத்திருக்கும்.

velleruku

எனவே தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் உடனே நிறைவேறும், மனநிம்மதி கிடைக்கும், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், உடல் நலக்குறைவு இருந்தாலும் சிறந்த முன்னேற்றம் ஏற்படும், செல்வவளம் பெருகி வீட்டில் எப்பொழுதும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிலைக்கொண்டிருக்கும்.

- Advertisement -