வறுமை என்பது உங்களை அண்டாமல் இருக்க உங்கள் வீட்டு சமையலறையில் இந்த மூன்று பொருட்களை மட்டும் குறைவில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள்

lakshmi1
- Advertisement -

ஒரு வீட்டில் முக்கியமான இடங்கள் என்பது சமையலறை மற்றும் பூஜை அறை தான். பூஜை அறையில் நம்மைக் காக்கின்ற தெய்வங்கள் வாசம் செய்கின்றன. எனவே பூஜையறையை எப்போதும் சுத்தமாகவும், சுபிட்சமாகவும் வைத்திருக்க வேண்டும். அடுத்ததாக மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவை சமைக்கும் இடம் தான் சமையலறை. இந்த இடத்தையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டு இடங்கள் தான் மகா லட்சுமி தேவி வந்தமரும் இடங்களாகும். அவ்வாறு சமையலறையில் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்கும் பொழுது ஐஸ்வர்யம் உண்டாகிறது. அவ்வாறு அஞ்சறைப்பெட்டியில் சில்லரை காசுகள் வைத்திருந்தால் பணத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். அது போல சமையலறையில் நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் இந்த மூன்று பொருட்களை எப்பொழுதும் குறைவில்லாமல் வைத்திருந்தால், வறுமை என்பதே இருக்காது, பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அந்த பொருட்கள் என்ன? அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே சமையலறையில் ஒரு சில பொருட்கள் குறைவு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு உப்பு, பருப்பு, அரிசி மற்றும் அஞ்சரை பெட்டி பொருட்கள் இவை அனைத்தும் எப்பொழுதும் குறைவில்லாமல் இருக்க வேண்டும். அந்த பொருட்களை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முழுவதுமாக தீர்ந்து போக விடக் கூடாது.

- Advertisement -

அடுத்ததாக மிகவும் முக்கியமாக அனைவரது வீட்டிலும் பசும் நெய் இருக்க வேண்டும். இந்த நெய் மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாகும். நாம் உண்ணும் உணவில் சிறு துளி நெய்யாவது தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது நெய் வைத்து தினமும் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் துன்பம் என்பதே இருக்காது.

அடுத்ததாக நெல்லிக்காய் ஊறுகாய். இந்த நெல்லிக்காய் ஊறுகாய் நிச்சயம் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டும். ஏனென்றால் குபேரருக்கு பிடித்த ஒரு பொருள் என்றால் அது நெல்லிக்காய். அதாவது நெல்லிக்காயில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறாள் என்பது நம்பக் கூடிய விஷயமாகும். குபேரர் தனது சொத்துக்களை இழந்து, அவற்றைத் திரும்பப் பெற, நெல்லி மரத்திடம் வரம் வேண்டி, மகாலட்சுமி தாயார் அருளைப் பெற்ற பிறகு தான் தனது செல்வங்களை திரும்பப் பெற முடிந்தது.

- Advertisement -

எனவே நெல்லிக்காயை எப்பொழுதும் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அதாவது நெல்லிக்காய் ஊறுகாயாக இருந்தால் அதிக நாட்களுக்கு இல்லங்களில் வைத்திருக்க முடியும். அப்படி ஊறுகாய் வைத்திருக்க முடியாதவர்கள் இனிப்பு நெல்லிக்காய் அல்லது ஊறவைத்த நெல்லிக்காய் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக இந்த நெல்லிக்காயில் தீபம் ஏற்றி வழிபடவும் செல்வம் வந்து சேரும்.

மூன்றாவதாக அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய ஒன்று பிரியாணி இலை. பொதுவாகவே இந்த பிரியாணி இலைக்கு எதிர்மறை சக்தி அதிகமாக இருக்கிறது. எனவே நாம் செய்யும் உணவில் தினமும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து, அதில் இரண்டு, மூன்று இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரின் வாசம் வீடு முழுவதும் பரவச் செய்யலாம். அல்லது இந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டின் ஓரங்களில் தெளித்து விடலாம். இவற்றின் வாசனை மன அழுத்தத்தை குறைக்கிறது. மனச் சுமை குறைந்தாலே நம்மை விட்டு தரிதிரம் விலகிவிடும்.

- Advertisement -