பணம் பல வழிகளில் உங்கள் வீடு தேடி வர, வசம்பை யார் கண்ணுக்கும் தெரியாமல், உங்கள் வீட்டில் இந்த இடத்தில் ஒளித்து வைத்தாலே போதும்.

vasambu
- Advertisement -

நம் வீட்டு அக்கம் பக்கத்தில் இருக்கும் சில பணக்காரர்களை எல்லாம் நன்றாக உற்று கவனித்தால் தெரியும். அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எந்த வேலை செய்ததால், அவர்களுக்கு இப்படி, எப்படி கோடி கோடியாக பணம் வருகிறது என்பதே அடுத்தவர்களுக்கு தெரியாது. பணக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வரும். ஆனால், எந்த வழியில் அவர்கள் அந்த பணத்தை சம்பாதிக்கின்றார்கள் என்பதை வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள். இதே போல் உங்களுக்கும் பணம் பல வழியில், வீட்டிற்குள் வந்து கொண்டே இருக்க தாந்திரீக ரீதியாக வசம்பை வைத்து ஒரு பரிகாரத்தை செய்யப்போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுக்கும் பணம் பல வழிகளில் வந்து பணப்பெட்டியை நிரப்பும்.

cash

ஆனால் எந்த வழியில் பணம் வந்தது என்ற ரகசியத்தை மட்டும் நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ரகசியமாக இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து பலனடையலாம். கட்டாயம் நல்ல வழியில் தான் அந்த பணம் உங்கள் கைகளை வந்து சேரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இந்த ரகசியமான பரிகாரத்தை செய்ய நமக்கு ஒரு சிறிய கண்ணாடி பவுல், கல் உப்பு, வசம்பு, மருதாணி விதைகள் தேவை. கண்ணாடி பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கல் உப்பை நிரப்பிவிட வேண்டும். அந்த கல் உப்பில் யார் கண்ணுக்கும் தெரியாமல் வசம்பையும் மருதாணி விலைகளையும் மறைத்து வைத்து விட வேண்டும்.

marudhani-vidai

கண்ணாடி பவுலின் அடியில் மருதாணி விதைகளையும் சிறிய துண்டு வசம்பை வைத்து விட்டு, அதன் மேலே நிரம்ப கல் உப்பை கொட்டி வைத்தாலும் பரவாயில்லை. ஆனால் கல் உப்புக்கு நடுவே வசம்பு இருப்பது வெளி ஆட்களின் கண்ணுக்கு தெரியக் கூடாது. இந்த கண்ணாடி பவுலை உங்கள் வீட்டு பூஜையறையில் அல்லது வரவேற்பறையில் வைத்துக் கொள்ளலாம். வாரம் இரண்டு முறை பழைய கல் உப்பை மட்டும் எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு, புதிய கல்உப்பை மீண்டும் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு முறை.

- Advertisement -

இரண்டாவதாக, உங்களுடைய வீட்டு உப்பு ஜாடியில் ஒரு சிறிய துண்டு வசம்பை கல்லுப்புக்கு அடியில் ஒளித்து வைத்துவிடுங்கள். யார் வந்து உப்பு ஜாடியில் இருந்து உப்பை எடுத்தாலும், அந்த வசம்பு அடுத்தவர்களுடைய கையிலும் தட்டுபட கூடாது. அடுத்தவர்கள் பார்த்தாலும் அந்த வசம்பு கட்டாயம் தெரியக்கூடாது. வசம்பு அடுத்தவர்களுடைய கண்களுக்கு தெரிந்துவிட்டால் உங்களுடைய அதிர்ஷ்டம் வெளியே சென்றுவிடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

vasambu 3

வசம்பு எல்லாவற்றையும் தன் வசியப்படுத்தி கொள்ளக் கூடியது. அதாவது நேர்மறை ஆற்றலை வசியப்படுத்த கூடிய தன்மை இந்த வசம்புக்கு நிறையவே உள்ளது. மகாலட்சுமி அம்சம் பொருந்திய கல் உப்பில் இந்த வசம்பை வைக்கும் போது, நம் வீட்டிற்குள் மகாலட்சுமி வசியம் ஆகிவிடுவாள். இதேபோல் மருதாணி விதைகளும், மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தது. மருதாணி விதை இருக்கும் வீட்டில் நிச்சயமாக லட்சுமிகடாட்சம் இருக்கும்.

uppu

மகாலட்சுமிக்கு சொந்தமான உப்பும் மருதாணி விதைகளும் சேர்ந்திருக்கும் போது அதனுடைய சக்தி நமக்கு இரட்டிப்பாக கிடைக்கின்றது. இரண்டு பரிகார முறைகளையும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக வெகு சில நாட்களிலேயே உங்களை அறியாமல் உங்கள் வீட்டிற்குள் பணம் நடமாடுவதை உங்களால் உணரமுடியும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -