நினைத்தது உடனே நடக்க, உங்கள் வாக்கு உடனே பலிக்க தினந்தோறும் இதை செய்தாலே போதும்.

krambu
- Advertisement -

நம் மனதில் எதை நினைக்கின்றோமோ அது உடனே பலிதம் ஆக வேண்டும் என்ற ஆசை தான் பெரும்பாலும் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் நாம் நினைத்தது, நினைத்து உடனேயே நமக்கு கிடைத்து விட்டால், நாம் நினைத்த விஷயம் உடனே நடந்து விட்டால் வாழ்க்கையில் நிச்சயமாக எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. குறிக்கோளாக இருந்தாலும், ஆசைப்பட்ட பொருளாக இருந்தாலும் பல தடைகளை தாண்டி போராடி நம் கைக்கு வரவேண்டும். அப்போதுதான் அதனுடைய அருமை பெருமைகள் நமக்கு புரியும். சரி, நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ள, நம்முடைய குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள, நம் வாக்கு அப்படியே பலிதமாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

krambu

வசீகரத் தன்மை இருப்பவர்களால் மட்டும் தான் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். நாம் எதை நம் மனதில் நினைத்துக்கொண்டே இருக்கின்றோமோ அது நமக்கு வசியம் ஆக வேண்டும். நம்முடைய வாயில் நாம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகள் அப்படியே பலிக்க வேண்டும். மேல் சொன்ன இந்த வரங்களை நாம் பெற்று விட்டோமே ஆனால், வாழ்க்கையில் சுலபமாக ஜெயித்து விடலாம்.

- Advertisement -

நாம் நினைப்பதையும், நான் சொல்வதையும் அப்படியே நடத்தி தரக்கூடிய வசிய சக்தி நிறைந்த ஒரு பொருள் என்றால் அது கிராம்பு. இந்த கிராம்பு வசிய சக்தி நிறைந்தது. கிராம்பை வைத்துக்கொண்டு கிராம்பில் உள்ள வாசனையை வைத்து கொண்டு எதை வேண்டுமென்றாலும் நம் வசியப்படுத்தி விட முடியும். வசியம் என்ற சொல்லை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நாம் நினைக்கும் நல்ல எண்ணங்களை நல்ல வார்த்தைகளை நம் வசியப்படுத்தி கொண்டால்தான், நினைத்ததை சாதிக்க முடியும்.

காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு வாயை முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு கிராம்பை எடுத்து உங்களுடைய வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். அந்த கிராம்பு அப்படியே உங்கள் வாய்க்குள், பக்கவாட்டிலோ அல்லது நாக்கிற்கு அடியிலோ வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு எது தேவை என்று நினைக்கிறீர்களோ ஒரே வரியில் அந்த வார்த்தையை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

எடுத்துக்காட்டிற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் கிராம்பை வாயில் வைத்துக்கொண்டு ‘நல்ல வேலை கிடைக்க வேண்டும்’ என்ற வரியை 108 முறை சொல்ல வேண்டும். 108 முறை இந்த ஒரு வரியே உச்சரித்து விட்டு, வாயிலிருக்கும் கிராம்பை கீழே துப்பி விடலாம். அதன் பின் சாதாரண ஒரு டம்ளர் தண்ணீரை பருகி விடுங்கள் போதும்.

meditation

48 நாட்கள் இதே போல தொடர்ந்து நல்லவேளை கிடைக்க வேண்டும் என்று கிராம்பை வாயில் வைத்துக்கொண்டு பயிற்சியை செய்தால், உங்களுக்கு 48 நாட்கள் முடிவதற்குள், விருப்பமான நல்ல வேலை கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. வேலை கிடைக்காத பட்சத்தில் நம்பிக்கையோடு மீண்டும் இதே பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால், கூடிய விரைவில் நல்ல செய்தியை இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரம் நல்ல வேலை கிடைப்பதற்காக மட்டுமல்ல. பணப் பிரச்சினை தீர வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும், திருமணம் விரைவில் நடக்க வேண்டும், இப்படி உங்களுக்கு எந்த வரம் வேண்டும் என்றாலும் கேட்கலாம்.

இதேபோல் தினம்தோறும் கிராம்பை வெறுமனே உங்களுடைய வாயில் போட்டு பல்லில் லேசாக கடித்துக்கொண்டு, அப்படியே ஒரு பத்து நிமிடம் இருக்க வேண்டும். இப்படி கிராமமானது உங்கள் வாயில் இருக்கும் போது உமிழ் நீர் சுரக்கும். அந்த உமிழ் நீரை நீங்கள் விழுங்கி விட்டால், உங்களுடைய வாக்கு சுத்தமாகும். நீங்கள் சொல்லக்கூடிய சொல் அப்படியே பலிதமாகும். (நம்முடைய வாக்கு பலிக்கும் என்பதற்காக அடுத்தவர்களுக்கு சாபம் எல்லாம் விடக்கூடாது). சில பேர் சொன்னால் அப்படியே பலிக்கும் என்று சொல்வார்கள் அல்லவா. அதேபோல் உங்களுடைய சொல் வாக்கும் பலிக்கக் கூடியதாக மாறிவிடும்.

money

இதையும் தொடர்ந்து 48 நாட்கள் முயற்சி செய்து பாருங்கள்‌. அந்தக் காலத்தில் குறி சொல்பவர்கள் தங்கள் வாக்கு பலிக்க, இந்த லவங்க பரிகாரத்தை பின்பற்றி வந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கையோடு பரிகாரத்தை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயமாக நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -