வாஸ்து தோஷத்திற்காக பயந்து இனி நீங்கள் வீடுகளை மாற்ற வேண்டாம். இந்த எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்.

vasthu
- Advertisement -

நாம் புதிதாக வீடு கட்டினாலும் அல்லது நிலம் வாங்கினாலும் வியாபாரம் தொடர்பாக கடைகள் கட்டினாலும் எதை செய்தாலும் வாஸ்து பார்த்து செய்யும் போது நாம் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற இந்த வாஸ்து பலன் துணையாக அமைகிறது. முதலில் வாஸ்து என்பது என்ன என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம். பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமானின் வேர்வை துளி நிலத்தில் விழுந்து உருவானது தான் இந்த வாஸ்து. வாஸ்து என்பது கடவுள் கிடையாது. வாஸ்து என்பது ஒரு பூதம். சிவனின் வேர்வை துளியில் தோன்றியது தான் இந்த வாஸ்து பூதம். இந்த வாஸ்து, நிலத்தை தன் வசமாக்கி காத்து கொண்டு இருக்கிறது. நிலத்தின் மீது கட்டும் கட்டத்திற்கு பூமி பூஜை போட்ட பின் தான் தொடங்குவார்கள்.

இன்றைய வாஸ்து பிரச்சினை என்பது உண்மையிலேயே பெரிய பூதாகரமாக தான் உள்ளது. எந்தெந்த மூலையில் என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டும், எது எது எங்கு வர வேண்டும், எந்த திசையில் வைக்க வேண்டும், இப்படி வாஸ்து என்று பார்த்துக் கொண்டே போனால், எடுத்து வைக்கும் ஒரு ஒரு அடியிலும் கூட வாஸ்து பார்த்து தான் வைக்க வேண்டும் என்று கூறிவிடுவார்கள். அப்படி பார்த்துக் கொண்டே போனால் நம்மால் எதையும் செய்ய முடியாது. 100% வாஸ்து பார்த்து வாஸ்து முறைப்படி அமைவது கோயில்களில் மட்டுமே. எனவே தான் நமக்கு எங்கு சென்றாலும் கிடைக்காத ஒரு நிம்மதி, அமைதி தெய்வீக தன்மை இவையெல்லாம் கோவில்களில் கிடைக்கிறது. அதையெல்லாம் நாம் வீடுகளில் கொண்டு வர முடியாது. ஓரளவிற்கு அதன் ஆற்றலை நாம் கூட்ட முடியும். ஆனால் இன்று இந்த வாஸ்து பரிகாரங்கள் என்ற பெயரில் பெருமளவில் நாம் பயந்து போய் நிற்கிறோம். பஞ்சபூதங்களின் தலைவனான ஈசனை சரணடைத்தாலே வாஸ்து பிரச்சனை பாதி அளவுக்கு குறைந்துவிடும் ஏனென்றால் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவன் அவனே.

- Advertisement -

அந்த சிவபெருமானுக்கு முதல் வணக்கத்தை வைத்துவிட்டு வாஸ்து பிரச்சனைகளுக்கு உண்டான பரிகாரங்களை பார்த்து விடுவோம். முதலில் வீட்டிற்கு முன் விநாயகரை பிரதிஷ்டை செய்வது நல்லது. இது பெரும்பாலும் முச்சந்தி, தெருக்கூத்து போன்ற காரணங்களுக்காக வைத்திருப்பார்கள். வாஸ்து சரியாக அமையவில்லை என்று தோன்றுபவர்களும் இதை செய்யலாம். சரி, சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் இதை செய்யலாம், வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வது இதற்கும் அவர்கள் பெருமளவு கவலை கொள்ள தேவையில்லை.

ஏனென்றால் அனைத்திற்கும் பொதுவான ஒரு பரிகாரம் விடியற்காலையில் இருந்து விளக்கேற்றுவதே, அது பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றுவதாக இருந்தாலும் சரி, சூரிய உதயத்திற்கு முன் ஏற்றுவதாக இருந்தாலும் சரி, இதை செய்தாலே எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி ஆகிவிடும். இதோடு வாசலில் கல்லுப்பு வைப்பது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் மலர்களை போட்டு வைப்பது, அது மட்டுமின்றி எலுமிச்சை இரண்டாக நறுக்கி ஒரு புறம் மஞ்சளும், மறு புறம் குங்குமம் தடவி வாசலில் இருபுறமும் வைக்கலாம். இவையெல்லாம் வீட்டு வாசலில் செய்யும் எளிய பரிகாரங்கள். சரி வீட்டிற்குள் என்ன செய்ய வேண்டும்.

- Advertisement -

வீட்டிற்குள் எப்போதும் மந்திரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் படி செய்யலாம். கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சஹஸ்சரநாமம், லலிதா சஹஸ்வரநாமம், கந்த குரு கவசம் இது போன்ற ஸ்லோகங்கள் நம் இல்லங்களில் ஒலித்துக் கொண்டே இருக்க செய்யலாம். அது மட்டும் இன்றி சாம்பிராணி தூபம் கட்டாயம் தினமும் போட வேண்டும். அது காலை மாலை எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை. காலை மாலை என இரு வேலையும் கட்டாயமாக தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் 5 தீபமாக இருந்தால் நல்லது. வீட்டில் பெண்கள் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பாளை வழிபட்டாலும் இந்த வாஸ்து தோஷம் நீங்கிவிடும்.

இவை தோஷம் ஏற்பட்டால் செய்யப்படும் பரிகாரங்கள். ஆனால் இது போன்ற தோஷங்கள் வராமல் இருக்க, நாம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருள்கள் உடைந்து விட்டாலோ, பழுதடைந்து விட்டாலோ, அதனை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விட வேண்டும். தேவைப்படும் என நினைத்து எதையும் வீட்டில் சேர்த்து வைக்கக் கூடாது. அதாவது வீட்டை எப்போதும் குப்பையாக வைத்திருக்கக் கூடாது.

அது மட்டும் இன்றி இது இப்படி நடந்து விட்டது. இது சரியில்லை அது சரியில்லை என்று எப்போதும் வீட்டில் அமர்ந்து கொண்டு புலம்பிக் கொண்டு இருந்தால், நாம் எத்தனை பரிகாரங்களை செய்தாலும் நிவர்த்தி கிடையாது. இது போன்ற எளிய பரிகாரங்கள் மூலம் வாஸ்து பிரச்சினைகளை சரி செய்து கவலையின்றி நிம்மதியாக இருங்கள்.

- Advertisement -