வாஸ்து சாஸ்திரத்தின்படி அதிர்ஷ்டத்தை அள்ளித் தர வீட்டின் நிலை வாசற் படியில் இந்த இரண்டு பொருட்களை மட்டும் தவறாமல் வைத்து விடுங்கள்

nilaivasal
- Advertisement -

வீடு என்பது மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும். கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள் இவ்வாறு அனைவரும் சேர்ந்து இருப்பது தான் வீடு என்பதற்கு முழு அர்த்தமாகும். இந்த வீட்டில் எப்பொழுதும் சந்தோஷம் நிறைந்து இருக்க வேண்டும். மனநிம்மதி இருக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் நலனிலும் நல்ல முன்னேற்றம் இருக்க வேண்டும். அப்படி நமது குடும்பத்தின் நலனில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது நமது வீடாகும். இவ்வாறான வீட்டினை வாஸ்துப்படி சரியாக கட்டி இருந்தால் நமக்கு உண்டாகும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நமது வீட்டிற்குள் நுழையாமல் தடுத்து விடும். ஆனால் சிலரது வீடு ஏதாவது சில வாஸ்து குறைபாடுகளுடன் தான் இருக்கும். எனவே எப்பொழுதும் வீட்டின் வாசற்படியில் இந்த இரண்டு பொருட்களை மட்டும் மறந்திடாமல் வைத்துவிட வேண்டும். இதன் மூலம் வாஸ்து சாஸ்திரத்தின் படி எந்த குறையாக இருந்தாலும் அவை நிவர்த்தியாகி செல்வவளம் பெருகி வரும்.

பொதுவாக வீடு என்பது கிழக்கு, மேற்கு, வடக்கு பார்த்த வாசப்படி வைத்த அமைந்திருக்கலாம். இதில் கிழக்கு, வடக்கு என்பது மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த திசைகள் ஆகும். அதுபோல வீட்டின் சமையலறை இருக்க வேண்டிய திசை வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். அது போல பூஜை அறை அனைவரது வீட்டிலும் தவறாமல் கிழக்கு திசை நோக்கி அதாவது சூரியன் உதிக்கும் திசையை பார்த்து தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் குபேர மூலையில் நிச்சயம் பணம் வைக்கப் பயன்படுத்தும் பீரோவை வைத்துக் கொள்ளலாம். அல்லது அலமாரி செய்து கொள்ளலாம். இவ்வாறு இல்லாமல் அங்கு குளியல் அறை அமைப்பது, சமையலறை அமைப்பது இதுபோன்ற தவறுகள் செய்து விட்டால் நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அவை சற்றும் கையில் நிற்காமல் கரைந்து கொண்டே இருக்கும்.

அதுபோல ஒவ்வொரு வீட்டின் பாதுகாப்பாக இருப்பது அந்த வீட்டின் நுழை வாசல் படியாகும். வீட்டிற்குள் எவ்வளவு விலை உயர்ந்த பொருட்கள், தங்கம், பணம் போன்றவற்றை வைத்திருந்தாலும் அந்த நிலை வாசல்படியில் இருக்கும் வாசல் கதவு, பூட்டு இவற்றை நம்பியே அனைத்தையும் விட்டுவிட்டு செல்கிறோம். அவ்வாறு வீட்டின் அரணாக உள்ள நிலை வாசற் படியில் செய்யும் இந்த விஷயங்கள் உங்கள் வீட்டின் வாஸ்து குறைபாடுகள் அனைத்தையும் தீர்த்து விடும்.

அதுபோல நிலைவாசல் என்பது சூரியனின் அம்சமாகும். அதனால் தான் அனைவரது வீட்டிலும் நிலைவாசலுக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, கோலமிட்டு அலங்காரம் செய்து, பூஜை செய்யும் பொழுது இவற்றிற்க்கும் தீப, தூப ஆராதனை காண்பிக்கின்றனர். எனவே தினமும் காலை மற்றும் மாலை வேளையில் இரண்டு அகல் தீபத்தை இந்த நிலை வாசற் படியில் ஏற்றி வைப்பதோடு, வாசலின் முன் புறத்தில் மேல் பகுதியில் யானைகண் படம் அல்லது பைரவர் படத்தை தவறாமல் மாட்டி வைப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைத்து வாஸ்து தோஷத்தையும் தகர்த்தெரிந்து அதிர்ஷ்டத்தை பெற முடியும்.

- Advertisement -