வற்றாத பணவரவு கிடைக்க, பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க வீட்டில் செய்ய வேண்டிய விளக்கு பரிகாரம்

cash
- Advertisement -

வீட்டில் தினந்தோறும் விளக்கு ஏற்றுவது என்பது இந்திய கலாச்சாரத்தின் படி தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். வீட்டில் விளக்கு எரிவது மங்கள உணர்வை கொடுக்கிறது. இந்த தீபம் வீட்டிற்கு மிகப்பெரிய ஆகர்சனத்தை அளிக்கக்கூடிய தன்மை உடையது. இந்த விளக்கு, அதில் ஊற்றப்படும் எண்ணெய் மற்றும் விளக்கின் ஒளி எரியும் திசை இவற்றைப் பொறுத்து பல்வேறு விதமான இறை ஆற்றலை இந்த விளக்கு கிரகித்துக் கொள்கிறது. வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பதன் மூலம் சகல தோஷங்களும் விலகி விடும் என்பது அனைவரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். விளக்கு ஏற்றுவதில் ஒவ்வொரு விதமான பூஜைகள் இருக்கின்றன. பலவிதமான பரிகாரங்களுக்கும் இந்த விளக்கு பூஜை செய்யப்படுகிறது. அவ்வாறு தடையில்லாத பணவரவிற்க்கு ஒரு சிறந்த விளக்கு பூஜை இருக்கிறது. இந்த விளக்கு பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளுக்கும் உரியவராக ஒவ்வொரு தேவதை இருக்கிறார்கள். கிழக்கு திசைக்கு உரியவராக இந்திரன் இருக்கிறார். எனவே கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றி வைத்தால் இந்திரன் போன்று சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

மேற்கு திசைக்கு அதிபதியாக வருணன் இருக்கிறார். வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரன் இருக்கிறார். எப்பொழுதும் வீட்டில் ஏற்றப்படும் விளக்குகளை கிழக்கு, மேற்க்கு, வடக்கு என மூன்று திசைகளில் மட்டுமே ஏற்றி வைக்க வேண்டும். எப்பொழுதும் தெற்க்கு திசை நோக்கி விளக்கு ஏற்றி வைக்கக்கூடாது. இப்படி அனைத்து திசைகளிலும் இருக்கும் தேவதைகளின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டுமென்று இவ்வாறு பூஜை செய்திடவேண்டும்.

அதற்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் என்னவென்றால் மூன்று அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஊற்றுவதற்கு சுத்தமான பசு நெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த விளக்குகளில் போடுவதற்காக பஞ்சுத் திரியை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஏதேனும் ஒரு வாசனை மலர்களை சிறிதளவு எடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த விளக்குப் பூஜையை எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் சிறப்பாக செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, கிருத்திகை இது போன்ற நாட்களில் செய்வது மிகவும் நற்பலனை கொடுக்கிறது. இந்த பூஜையை மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். அதற்காக முதலில் எப்பொழுதும் போல பூஜை அறையில் நீங்கள் பூஜை செய்து முடித்துவிட வேண்டும். பிறகு அகல் விளக்குகளில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பிறகு அதில் நெய் ஊற்றி, திரி போட வேண்டும்.

பின்னர் பூஜை அறைக்கு முன்னர் அமர்ந்து கொண்டு, அங்கு சிறிய இடத்தில் லேசாக தண்ணீர் தெளித்து, மஞ்சள் தூவி, கோலமிட வேண்டும். பிறகு அதன் மீது சிறிதளவு வாசனை மலர்களை தூவி விடவேண்டும். பின்னர் மூன்று அகல் விளக்குகளை நேர்கோட்டு திசையில் வைத்துவிட வேண்டும். அதாவது ஒரு அகல் விளக்கை கிழக்கு திசை நோக்கியும், மற்றொன்றை நடுவில் வைத்த விளக்கிற்க்கு இடதுபுறம் வடக்கு திசை நோக்கியும், இன்னொரு விளக்கை வலதுபுறம் மேற்கு திசை நோக்கியும் வைத்துவிட வேண்டும். பிறகு விளக்கை ஏற்றிவிட்டு, மனதார உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் அனைத்தும் தீர்ந்து, எப்போதும் பணம் வருவதற்கான அனைத்து வழிகளும் கிடைக்க வேண்டும் என்று உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த விளக்கு பூஜையை தொடர்ச்சியாக 21 நாட்கள் அல்லது 42 நாட்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -