பூஜை அறையில் தினமும் இந்த திரி போட்டுத் தீபம் ஏற்றினால் போதும். வீட்டிற்குள் பணம் வர எந்த தடையும் இருக்காது. வற்றாத செல்வம் வீட்டில் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும்.

cash-deepam-vilakku
- Advertisement -

கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுப்பது போல உங்களுடைய வீட்டில் எப்போதுமே சந்தோஷமும், லட்சுமி கடாட்சமும், செல்வ வளமும் வற்றாமல் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் வீட்டிலும் சரி, பூஜை அறையிலும் சரி, நாம் எந்தெந்த விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றிய சில ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பின் வரக்கூடிய விஷயங்களை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தாலே போதும். வறுமை உங்கள் வீட்டு நிலை வாசலில் காலடி எடுத்து வைக்காது. வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் வீட்டை விட்டு வெளியே செல்லாது.

agal-vilakku-deepam

எந்த வீட்டில் தினந்தோறும் பூஜை அறையில் தீபம் ஏற்ற படுகிறதோ, அந்த வீட்டில் வறுமை என்னும் இருள் சூழுவதற்கு வாய்ப்பே கிடையாது. குறிப்பாக மகாலட்சுமி அம்சம் கொண்ட பெண்கள் தினம்தோறும் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றவேண்டும். காலை அல்லது மாலை இரண்டு வேளை ஏற்றினாலும் சரி, முடியாதவர்கள் மாலை ஒரு நேரமாவது கட்டாயமாக ஒரு மணி நேரமாவது வீட்டில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக ஒரு சிறிய மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். அந்த எண்ணெயில் இரண்டு கிராம்பு போட்டு, தாமரைத் தண்டு திரி போட்டு, தீபம் ஏற்றி பூஜை அறையில் வைத்தால் போதும். உங்கள் வீட்டில் பணவரவிற்கு எந்த ஒரு தடையும் இருக்கவே இருக்காது.

coconut oil 2

ஒரே ஒருநாள் இந்த தீபத்தை பூஜை அறையில் ஏற்றி வைத்துவிட்டு பலனை எதிர் பார்த்தால் நிச்சயம் அது நடக்காது. குறைந்தது மூன்று மாதங்கள் தொடர்ந்து இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றி வந்தால் நிச்சயமாக நல்லதொரு பலன் உங்களை தேடி வரும். அதன் பின்பும் இந்த தீபம் ஏற்றுவதை நிறுத்தி விடக்கூடாது. தினமும் இந்த தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் எந்தக்காலத்திலும் உங்களுக்கு அடுத்தடுத்து வரக்கூடிய வம்சமும் பணத்திற்கு கஷ்டப்படாமல் இருக்கும்.

- Advertisement -

பூஜை அறையில் தீபம் ஏற்றுவதற்காக வாங்க கூடிய தேங்காய் எண்ணெயை மரச் செக்கு தேங்காய் எண்ணெயாக பார்த்து வாங்கி கொள்ளுங்கள். இந்த தீபம் கிழக்கு நோக்கி ஏற்றலாம். அப்படி இல்லை என்றால், வடக்கு நோக்கி இந்த தீபத்தை ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. உங்கள் வீட்டில் மண் அகல் விளக்கு இருந்தால் அந்த விளக்கில் இந்த தீபத்தை ஏற்றலாம். அப்படி இல்லை என்றால் ஜோதி வடிவத்தில் விளக்கு இருக்கும், அதாவது நடுவே திரி போட்டு ஏற்றக்கூடிய தீபம் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விளக்கிலும் இந்த தீபத்தை ஏற்றி பலனடையலாம்.

krambu

காமாட்சி அம்மன் விளக்கு குத்து விளக்கு இவைகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. காமாட்சி அம்மன் விளக்கிலும் குத்து விளக்கிலும் நல்லெண்ணெய் ஊற்றி தான் தீபம் ஏற்றவேண்டும். காமாட்சி அம்மன் விளக்கில் தேவைப்பட்டால் நெய் ஊற்றி தீபம் ஏற்றிக் கொள்ளலாம். இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி நல்ல பலனை அடையலாம்.

- Advertisement -