வாழ்வு வளம் பெற விநாயகர் வழிபாடு

vinayagar pray
- Advertisement -

விநாயகர் என்றாலே விக்னங்களை தீர்ப்பவர். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான இன்னல்களையும் நீக்கி நம்மை நல்ல முறையில் வாழ வைக்கக் கூடிய எளிமையான தெய்வம் எனில் அவர் விநாயகர் தான். தெய்வங்களிலே நாம் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக நாம் நினைத்த மாத்திரத்தில் நின்ற இடத்தில் வணங்கக் கூடிய தெய்வம் எனில் அவர் விநாயகர் தான்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகருக்கு திதிகளில் சதுர்த்தி திதி மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. எந்த தெய்வங்களையும் அவர்களுக்கான நாட்களில் வணங்கும் போது நமக்கு அதற்கான பல நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் விநாயகரை சதுர்த்தி திதி அன்று எப்படி வழிபட்டால் நம் வாழ்க்கை வளம் பெறும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வாழ்க வளம் பெற சதுர்த்தி திதி வழிபாடு

நாளை புதன்கிழமை அன்று சதுர்த்தி திதியானது காலை 8:30 மணிக்கு மேல் துவங்கி நாளை முழுவதும் இருக்கிறது. ஆகையால் இந்த வழிபாட்டை எட்டு முப்பது மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் வழிபடும் நேரத்தில் ராகுகாலம் எமகண்டம் மட்டும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வழிபாடு செய்ய உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் இருந்தால் அவரை வைத்து வழிபாடு செய்யுங்கள். அது இல்லாத பட்சத்தில் படமுமோ வேறு எந்த விநாயகர் இருந்தாலும் பரவாயில்ல. விநாயகரை நன்றாக துடைத்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அருகம்புல் மாலை சூட்டி விடுங்கள்.

- Advertisement -

இவருக்கு நெய்வேத்தியமாக ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் தேன் வைத்து விடுங்கள். அதே போல் விநாயகருக்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி ஒரு அகல் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபம் கிழக்கு பார்த்து எரிய வேண்டும். இப்போது உங்கள் கையில் கொஞ்சம் அருகம்புல்லை வைத்துக் கொண்டு நீங்கள் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

ஓம் விக்ன விநாயகா போற்றி ஓம்

என்ற இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். இதை சொல்லும் போது ஒவ்வொரு அருகம்புல்லாக எடுத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனை வழிபாடு முடிந்த பிறகு தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். தேன் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் நாளைய தினம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு அருகம்புல் மாலை கட்டி கொடுங்கள். அப்போதும் விநாயகருக்கு முன்பாக நின்று இந்த மந்திரத்தை சொல்லி வணங்கி வாருங்கள். உங்கள் வாழ்க்கை நல்ல வளமுடன் செல்வ செழிப்புடனும் வாழக் கூடிய யோகத்தை இந்த வழிபாடு உங்களுக்கு தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நினைத்த வேலை கிடைக்க பரிகாரம்

எளிமையான தெய்வமான விக்னேஸ்வரனை நம்முடைய துன்பங்கள் நீங்கி நல்ல முறையில் வாழ இந்த ஒரு வழிபாடு துணை புரியும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -