வீடு கட்டும் பணி பாதியில் நின்று விட்டதா? மீண்டும் வேகமாக தடையில்லாமல் வீட்டை கட்டி முடிக்க, சுப காரிய தடைகள் நீங்க கவலைபடாமல் விநாயகருக்கு 3 தேங்காய்களை இப்படி செய்யுங்கள் போதும்!

- Advertisement -

இன்று பல பேருடைய வாழ்நாள் லட்சியமாக இருப்பது நமக்கென்று ஒரு வீடு என்பதாகும். சொந்த வீடு கட்டுவது என்பது பல பேருடைய கனவாக இருக்கிறது. இதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென தடைபடுவது, மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாக்கும். சொந்த வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல! ஜாதகப்படி உங்களுக்கு அதற்கான அமைப்பு இருக்கும் நேரத்தில் கட்டினால் தான் தடைகள் இல்லாமல் முடிவுக்கு வரும்.

ஆரம்பித்த வேலை பாதியில் நின்று விட்டால் என்ன செய்வது? அதே போல சுபகாரிய தடைகள் நீங்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். விநாயகருக்கு மூன்று தேங்காய்களை இப்படி செய்து பாருங்கள், வீடு கட்டும் பணி மீண்டும் மடமட என நடக்கத் துவங்கும். சுப காரிய தடைகளும் நீங்கி மங்களம் உண்டாகும். ரொம்பவே எளிதாக செய்யக்கூடிய இந்த தேங்காய் பரிகாரத்தை எப்படி செய்வது? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எமகண்ட வேளையில் செய்ய வேண்டும் என்பது ரொம்பவும் முக்கியமானது. எமகண்ட வேளையில் எந்த ஒரு பரிகாரத்தையும், சுபகாரியங்களையும் செய்வது கிடையாது. அப்படி இருக்க இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் கண்டிப்பாக எமகண்ட வேளையில் செய்தால் தான் பலன் கிடைக்கும். பல தடைகளை உண்டாக்கும் இந்த பிரச்சனையை தீர்க்க விநாயகரை மனம் உருகி வேண்டும் பரிகாரமாக அமைந்துள்ளது.

வீடு என்பது ஒருவருக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது. அதில் பல கனவுகளை தாண்டி தடைபடும் பொழுது நிறையவே மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது. பண ரீதியான பிரச்சனை அல்லது உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு இதனால் வீடு கட்ட முடியாமல் பாதியிலேயே நிற்பது போன்ற பல்வேறு காரணங்களால் வீடு கட்டும் பணி தடைபடுகிறது. அது மட்டுமல்லாமல் சிலருக்கு வீடு கட்ட ஆரம்பித்தவுடன் குடும்பத்தில் துர்மரணங்கள் கூட நிகழ்வது உண்டு. இதனால் தொடர்ந்து அந்த வீட்டை கட்ட முடியாமல் போய்விடும். இப்படிப்பட்ட எத்தகைய பிரச்சினைகளையும் நீக்க திங்கட்கிழமையில் எமகண்ட வேளையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

திங்கட் கிழமையில் காலை 10:30 மணி முதல் 12 மணி வரையிலான காலகட்டம் எமகண்டமாகும். இந்த நேரத்தில் கிழக்கு நோக்கி விநாயகர் படம் ஒன்றை வையுங்கள் அல்லது விக்கிரகம் இருந்தாலும் பரவாயில்லை. இவருக்கு ரொம்பவும் இஸ்டமான பச்சரிசியில் பிடித்த கொழுக்கட்டைகளை தயாரிக்க வேண்டும். பச்சரிசி, வெல்லம், தேங்காய், ஏலக்காய் கலந்த கொழுக்கட்டையை பிடிகளாக பிடித்து வாழை இலையில் நைவேத்தியம் படையுங்கள். பின்னர் விநாயகருக்கு முக்கண் உள்ள மூன்று தேங்காய்களை எடுத்து பூ கட்டும் காய்ந்த வாழை நாரினால் நன்கு இறுக்கமாக கட்டி மாலை போல மூன்று தேங்காய்களையும் கட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனை விநாயகருக்கு அணிவித்து மனதார உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டிக் கொண்டு மணி அடித்து, தீப, தூப, ஆரத்தி காண்பிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு திங்கட் கிழமையிலும் எமகண்ட வேளையில் விநாயகருக்கு மூன்று தேங்காய்களை வாழை நாரினால் இதே போல கோர்த்து அணிவித்து கொழுக்கட்டைகளை நைவேத்தியம் படைத்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் கூடிய விரைவிலேயே பாதியில் நின்ற வீடு கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கும். சுபகாரிய தடைகள் நீங்கி சுபீட்சம் பெருகும்.

- Advertisement -