24 மணி நேரமும் உங்கள் வீடு எப்பவுமே வாசமாக இருக்க இந்த சின்ன ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

spray
- Advertisement -

திடீரென்று மழை பெய்து அடுத்த நாள் வெயில் காய தொடங்கி விட்டால், நம் வீட்டிற்கு உள்ளேயே நமக்கு ஒரு கெட்ட வாடை வீச தொடங்கிவிடும்‌. அது என்னவென்றே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் நம் வீடு சுத்தமாகத் தான் இருக்கும். துணிகளில் இருக்கும் ஈரப்பசை. ஸ்கிரீனில் இருக்கும் ஈரப்பசை. காயாத ஈரத்துணி மணிகளின் வாடை என்று நம்முடைய வீட்டிற்குள் நுழையும் போதே நமக்கு நல்ல மனநிலையை கொடுக்காது. இப்படிப்பட்ட வாசனையை உடனடியாக நீக்கவேண்டும் என்றால் ரூம் ஸ்ப்ரே பயன்படுத்துவார்கள். ரூம் ஸ்ப்ரே என்பது நிரந்தரமாக இருக்கக்கூடிய வாசம் அல்ல. அடிக்கடி அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு செலவாகும் பணமும் அதிகம்.

அப்படி இல்லாமல் நிரந்தரமாக நம்முடைய வீட்டில் லேசாக ஒரு நல்ல வாசனை, அதுவும் தெய்வீக தன்மையோடு வீசிக்கொண்டே இருக்க வேண்டுமென்றால், இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பார்க்கலாம். ஒரு சிறிய கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பா எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சோடா உப்பு – 4 ஸ்பூன், பைனாப்பிள் எசன்ஸ் – 2 ஸ்பூன், பன்னீர் – 2 டேபிள் ஸ்பூன், ஜவ்வாது – 1 சிட்டிகை, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கலந்து இதன் மேலே ஒரு மெல்லிசான துணி போட்டு ரப்பர் பேண்ட் போட்டு கவர் செய்து அப்படியே வீட்டின் ஒரு ஓரத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

நம் வீட்டில் நெட் துப்பட்டா அல்லது குழந்தைகள் டிரஸ்ஸில் வலை போல துணி இருக்கும் அல்லவா, அதை வெட்டி இதன் மேலே போட்டு வைத்தால் இன்னும் வாசம் நன்றாக வெளிவரும். 1 மாதத்திற்கு அப்படியே வீடு முழுவதும் இந்த வாசம் பரவியிருக்கும். இதை அடிக்கடி மாற்ற வேண்டாம். இந்த கலவைக்கு உள்ளே இருக்கும் தண்ணீர் ட்ரையாக ஆரம்பிக்கும் அப்போது நீங்கள் எசன்ஸ், பன்னீர் மட்டும் சேர்த்துக் கொண்டால் கூட போதுமானது.

பைனாப்பிள் எசன்ஸ் மட்டும் அல்ல உங்களுடைய வீட்டில் வேறு எந்த நறுமணமுள்ள எசன்ஸ் இருந்தாலும் சரி இந்த சோடா உப்பில் ஊற்றிக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். இதை ட்ரை பண்ணி பாருங்க. இந்த வாசம் நமக்கு மனதிற்க்கு ரிலாக்சாகவும் இருக்கும்.

- Advertisement -

நாம் தயார் செய்த இந்த டப்பாவை, மூடி வைத்திருக்கும் கபோர்டு உள்ளே கூட வைத்துக்கொள்ளலாம். கபோர்ட் கதவை திறந்தவுடன் மழைக்காலத்தில் ஒரு கெட்டவாடை வீசும் அல்லவா அந்த வாடை எல்லாம் இல்லாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 1 டம்ளர் அளவு தண்ணீர், 2 ஸ்பூன் கம்ஃபோர்ட், சேர்த்து நன்றாக கலந்து விட்டு இந்த ஸ்பிரே வை மிதியடி, தலையணை, சோபா, ஸ்கிரீன் போன்றவற்றில் ஸ்ப்ரே செய்துவிட்டால் அந்த இடம் முழுவதும் அப்படியே பிரஷ்ஷாக ஃபீல் ஆகும். குறிப்பாக வாஷ் பேசன், சின்க்கிற்க்கு கீழே, குளியலறை கழிவறை இந்த இடங்களில் எல்லாம் கூட இந்த ஸ்ப்ரிவை பயன்படுத்தி பாருங்கள். ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.

- Advertisement -