வாழ்க்கையில் முன்னேறியே ஆக வேண்டும் என்ற வெறி உங்களுக்குள் வர வேண்டும் என்றால், இந்த வாசம் உங்கள் வீட்டில் வீசிக்கொண்டே இருக்க வேண்டும்.

cash-sadman
- Advertisement -

இன்று மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நாலு பேர் மதிக்கக்கூடிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எல்லோராலும் வாழ்க்கையில் முன்னேறி விட முடிகிறதா. நிச்சயம் இல்லை. ஒரு சில பேரால் மட்டும்தான் கஷ்டப்பட்டாலும் கூட வாழ்க்கையில் நிறைய முன்னேற்றத்தை காண முடிகிறது. வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே இருப்பவனுக்கும், வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இருப்பவனுக்கும் எது காரணமாக அமைகிறது என்று நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா.

திறமைகள் எவ்வளவு தான் இருந்தாலும் அதற்கு அங்கீகாரம் தரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நிறைய திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத ஒரே காரணத்தால் நிறைய பேர், இந்த திறமை வெளிவராமலேயே இருக்கின்றது. இந்த வாய்ப்புகள் எப்படி நமக்கு கிடைக்கும். முயற்சி முயற்சி முயற்சி. வாய்ப்புகள் கிடைக்கும் வரை முயற்சி செய்பவன் வெற்றியை அடைகின்றான். வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று முயற்சியை கைவிடுபவன் வாழ்க்கையில் தோற்கின்றான். ஆகவே விடாமுயற்சியை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கும் ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும். நிச்சயமாக நீங்களும் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சரி இப்போது பரிகாரத்தை பார்க்கலாம்.

- Advertisement -

ஏலக்காய், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஜாதிக்காய், நல்ல பூக்களின் வாசம், கிராம்பு, வசம்பு, சுக்கு, கல் உப்பு, ஜவ்வாது, புனுகு இப்படிப்பட்ட பொருட்களில் இருந்து வெளிவரக்கூடிய ஆற்றலும் நேர்மறை சக்தியும் வாசமும் நம்மை சுற்றி இருக்கக்கூடிய காற்றை சுத்தப்படுத்துகிறது. சுத்தமான நறுமணம் நிறைந்த அந்த காற்றை நாம் சுவாசிக்கும் போது, நம்முடைய உள் உணர்வு நம்முடைய, மூளையும் சுறுசுறுப்பாக இயங்கப்படுகிறது.

வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய சக்தி இப்படிப்பட்ட நல்ல காற்றை சுவாசிக்கும் போது நமக்குள்ளும் ஏற்படுகிறது. (மொத்த பொருளையும் வாங்கி வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதில் ஏதாவது ஒரு பொருளின் நறுமணம் உங்களுடைய வீட்டில் வீசிக்கொண்டே இருக்கட்டும். ஒரு பொருள் பழகியதான பிறகு அதை மாற்றி விட்டு மீண்டும் வேறொரு பொருளை வாங்கி வையுங்கள்.)

- Advertisement -

இதனால் நான் பரிகாரத்திற்கு இப்படிப்பட்ட நறுமணம் உள்ள பொருட்களை பயன்படுத்தும்படி  சொல்கின்றோம். நிறைய பேர் இதை தவறாக புரிந்து கொண்டு, இந்த பொருட்களை எல்லாம் வைத்துவிட்டால் பணம் வந்து விடும்மா என்று அவர்களுக்குள்ளேயே கேள்வி எழுப்பி, தவறாக புரிந்து கொள்கிறார்கள். இந்த பொருட்களை வைப்பதன் மூலம் உங்களுக்கு பணம் வருகிறதோ இல்லையோ, ஆனால் உங்களை சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் இருக்கும். அந்த நேர்மறை ஆற்றல் உங்களுடைய முன்னேற்றத்திற்கு தூண்டுதலாக இருக்கும். முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடிய விஷயங்களை தகர்த்தெறியும். இதனால் தான் ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் கட்டாயமாக மேல் சொன்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்று சாஸ்திர ரீதியாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் தவிர சாம்பிராணி தூபம் ஏற்றி, பூஜை அறையில் கற்பூரம், விளக்கு விளக்கு ஏற்றி உங்களுடைய வீட்டை எப்போதுமே இறையருள் நிறைந்த வீடாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த பாசிட்டிவ் எனர்ஜியே வாழ்க்கையில் உங்களை முன்னேற்றி விடும். மூளையை மங்கச் செய்யாது. சோம்பேறித்தனத்தை கொடுக்காது. அடுத்த வாழ்க்கையில் என்ன. அடுத்து வாழ்க்கையில் என்ன. என்று யோசிக்கும் உங்களுடைய எண்ணம் உங்களை மேலே உயர்த்திக் கொண்டே செல்லும். என்பது தான் உண்மை. இதை முயற்சி செய்து தான் பாருங்களேன். நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -