உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் எல்லாம் வறட்சியானால், பணப்பெட்டியும் வறட்சியோடு தான் காணப்படும். பிறகு வறுமை விடாமல் வந்து ஒட்டிக் கொள்ளும்.

vilakku
- Advertisement -

வறண்டு போன பூமி, வறண்டு போன கிணறு, வறண்டு போன ஏறி, ஆறு குளம் என்று எதுவுமே பயனளிக்காத ஒன்றுதான். நம்முடைய வீடும் வறண்ட பாலைவனம் போல் மாறாமல் இருக்க, நம்முடைய வீட்டில் எந்தெந்த பொருட்களை நாம் வற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது எந்தெந்த பொருட்களை நாம் வெறுமையாக விடக்கூடாது என்பதை பற்றிய சில சாஸ்திர ரீதியான குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தான் தெரிந்து கொள்ள போகின்றோம். இதுவும் சரிதான், இதை நாம் பின்பற்றினால் நம் வாழ்வில் வறட்சி இருக்காது. செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று நினைப்பவர்கள் பின் சொல்லக்கூடிய விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

இவையெல்லாம் வெறும் மூடநம்பிக்கை என்று நினைப்பவர்கள் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம்பிக்கையோடு செய்யக்கூடிய வேலைகள் தான் நமக்கு நல்ல பலனை கொடுக்கும். சரி விஷயத்திற்குள் செல்வோம். பொதுவாகவே ஒரு வீட்டிற்கு வெளிச்சத்தை கொடுக்கக் கூடியது விளக்கு. ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக காமாட்சி அம்மன் விளக்கு இருக்கும். அது வெள்ளி விளக்காக இருக்கட்டும். பித்தளை விளக்கமாக இருக்கட்டும். அதை வாரத்தில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மாதத்திற்கு ஒரு முறையோ உங்கள் சௌகரியம் போல சுத்தம் செய்து கொள்வீர்கள்.

- Advertisement -

காமாட்சி அம்மன் விளக்கை சுத்தம் செய்துவிட்டு, அதில் மஞ்சள் குங்கும பொட்டு வைத்துவிட்டு, அடுத்த நாள் விளக்கு ஏற்றிக் கொள்ளலாம் என்று காமாட்சியம்மன் விளக்கை வறட்சியாக எப்போதும் விடவே கூடாது. விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் போட்டு வைத்தவுடன் அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு உடனடியாக தீபத்தை ஏற்றி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

சில பேர் வீடுகளில் காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி விட்டு விடுவார்கள். சில சமயம் நாம் ஏற்றிய தீபத்தில் எண்ணெய் தீர்ந்து போய், அந்த திரி அப்படியே பின்னுக்கு எரிந்து அந்த விளக்கு முழுவதும் கருப்பு பிடித்து விடும். அப்படி ஆகக்கூடாது. ஆகவே எண்ணெய் ஊற்றி திரி போட்டு அந்த திரிக்கு மேலே, ஒரு ரூபாய் நாணயமோ அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தையோ போட்டு வையுங்கள். அப்போது திரி அந்த ஐந்து ரூபாய் நாணயம் வரைக்கும் தான் எரியும். அதற்கு மேலே எரிந்து போகாது. அணைந்து விடும் எண்ணெய் இல்லை என்றால் கூட.

- Advertisement -

அடுத்தபடியாக நம் ஒவ்வொரு வீட்டிலும் மகாலட்சுமி ரூபத்தில் இருப்பது பால். அதுவும் பசும்பாலாக வாங்குவது நம்முடைய வீட்டிற்கு நிறைய லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். இன்று நிறைய பேர் வீட்டில் பாக்கெட் பால் தான் பயன்படுத்துகின்றோம். அதனால் எந்த தவறும் கிடையாது. பால் என்றாலே அது மகாலட்சுமியின் சொரூபம் தான். இந்த பால் பாத்திரம் என்றும் வீட்டில் வறண்டு போகக் கூடாது.

பால் பாத்திரங்களை காய விடாதீர்கள். கிண்ணத்தில் பால் தீர்ந்து விட்டது. அதை சிங்கிள் போட்டால் கூட கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வையுங்கள். அதேபோல பால் வாங்கும் போது வெறும் பாத்திரத்தை கொண்டு போய் பால் வாங்காதீங்க. அந்த பாத்திரத்தில் ஒரு சொட்டு தண்ணீராவது இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த காலத்தில் எல்லாம் நம்முடைய அம்மாக்கள், பாட்டிகள் வெளியே பால்காரர் வந்துவிட்டால் அந்த பால் பாத்திரத்தை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அலம்பி கீழே கொட்டி விட்டு தான் பால் வாங்குவார்கள். காரணம் வறட்சியாக இருக்கக்கூடிய பாத்திரத்தில் பாலை ஊற்றக்கூடாது. ஒரு சொட்டு தண்ணீர் ஆவது இருக்கக்கூடிய பாத்திரத்தில் பாலை ஊற்றும் போது அது நமக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இது சில பேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்காது.

அதேபோல இரவு நேரத்திலும் வீட்டில் கொஞ்சம் பால் ஆவது இருக்க வேண்டும். சுத்தமாக பாலை தீர்க்கக் கூடாது. வீட்டில் எப்போதும் பால் பாத்திரத்தில் கொஞ்சம் பால் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்கு வறுமையும் வரட்சியும் இருக்கக் கூடாதா. இந்த விஷயங்களை பின்பற்றினாலும் வீட்டில் இருக்கும் வறுமை விரட்டி அடிக்கப்படும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -