பிடித்த வேலை கிடைக்க பரிகாரம்

senbaga poo lady
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் கனவு நல்லவேலை கிடைக்க வேண்டும் என்பது தான். அதுவும் அவர்களுக்கு பிடித்த வேலையாக இருக்க வேண்டியது அவசியம். பலரும் படித்து முடித்து விட்டு வேலை கிடைக்காமல பெரிதும் துன்பப்படுகிறார்கள். இன்னும் சிலரோ கிடைத்த வேலையை வேறு வழியில்லாமல் செய்து வருகிறார்கள்.

வேலை கிடைப்பதுடன் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டும். அது தான் கடினமான காரியம். அப்படி நம் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க பரிகாரம்

முதலில் வேலை கிடைக்க வேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் அந்த வேலை கிடைப்பதற்கான முழு முயற்சியும் எடுக்க வேண்டும். நமக்கு எந்த துறையில் வேலை வேண்டும் என நினைக்கிறோமோ அந்த துறையை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இப்படி வேலைக்காக நாம் முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இந்த ஒரு பரிகாரத்தையும் தொடர்ந்து செய்யும் போது நிச்சயம் நமக்கு பிடித்த வேலை நம்மை தேடி வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நீங்கள் செவ்வாய் வெள்ளி ஆகிய இரண்டு தினங்களில் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் செண்பக மலர்களை வாங்குவது தான். இந்த செண்பக மலர்களை 5 எண்ணிக்கையில் வாங்க வேண்டும். அதாவது 5,10, 15, 25 என்ற எண்ணிக்கையில் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த மலர்களை அருகில் இருக்கும் சிவாலயம் அல்லது முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று கொடுத்து வழிப்பட வேண்டும்.

இந்த மலர்களை மாலையாக தொடுத்து இறைவனுக்கு சாட்சி வழிபடலாம் முடியாதவர்கள் அப்படியே பூக்களாக கொடுத்தும் வழிபடலாம். இவை இரண்டுமே நல்ல பலனை தரும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 21 முறை செய்ய வேண்டும். அதாவது வாரத்திற்கு இரண்டு நாள் என 21 முறை செய்யும் போது நல்ல பலனை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர கணபதி வழிபாடு

ஒரு சிலருக்கு இத்தனை நாட்கள் முடிவதற்குள்ளாகவே வேலை கிடைத்து விடும் என்றும் சொல்லப்படுகிறது. சிலருக்கு சற்று தாமதமாகலாம் எந்த ஒரு பரிகாரமும் பலன் அளிப்பது நம்முடைய கர்ம வினைகள் பொருத்து. ஆகையால் சற்று தாமதமானாலும் நிச்சயமாக இந்த பரிகாரம் நல்ல பலனை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -