வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மன் விளக்கை வீட்டில் இப்படி ஏற்றினால், சொல்லமுடியாத அளவு செல்வவளம் நம் வீட்டில் கொட்டிக்கிடக்கும்.

vilakku
- Advertisement -

வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்பதற்காகத்தான் தினம் தோறும் வீட்டில் தீப வழிபாடு செய்ய வேண்டும் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. கஷ்டங்களை தீர்த்து வைப்பதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்கள் ஏராளம். ஆனால், தினம் தோறும் வீட்டில் இருக்கும் பெண் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து நல்லபடியாக வேண்டிக் கொண்டாலே போதும். கஷ்டங்கள் எல்லாம் காணாமலேயே போய்விடும். எப்படி வேண்டனும் தெரியுமா? உங்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வரத்தினை வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள். தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு தீபத்தின் முன்னால் அமர்ந்து கஷ்டங்களை சொல்லி புலம்பாதீர்கள்.

kamakshi vilakku

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். தினமும் நாங்கள் தீபமேற்றி வழிபாடு செய்தும் வீட்டில் தீராத துன்பங்களும் துயரங்களும் கஷ்டங்களும் இருந்து கொண்டு தான் வருகிறது. கர்ம வினையின் பயனால், விதியின் கட்டாயத்தால் சில கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை. இப்படிப்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாக ஒரு தீப வழிபாட்டுமுறை நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று இந்த தீபத்தை நீட்டினால் போதும்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு வெள்ளியில் காமாட்சியம்மன் விளக்கு ஒன்று, மிகமிக சிறியதாக ஒரு மகாலட்சுமி படம் பதிந்த தங்கக்காசு, தாமரைத் தண்டு திரி, ஒரு கண்ணாடி நமக்கு தேவைப்படும். பூஜை அறையை எப்போதும்போல சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பூலத் தட்டில், வெள்ளி விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி, அந்த நெய்யில் லட்சுமி படம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை போட்டு, தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். இந்த ஒளி பிரகாசமாக வீச, இந்த ஒளி பிரதிபலிக்க இதன் முன்னால் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைத்து விடுங்கள்.

coin

இந்த தீபம் ஒரு மணி நேரம் வரை உங்கள் வீட்டு பூஜை அறையில் எரிந்தால் கூட போதும். இப்படி தீபம் எரியும் போது அந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து உங்கள் வாழ்க்கைக்கு எது தேவையோ, உங்கள் குடும்பத்திற்கு எது நல்லதோ அது நடக்க வேண்டும் என்று அந்த காமாட்சி அம்மனிடம் மனநிறைவோடு கேளுங்கள். தீபத்தை ஏற்றி வைத்து வைத்து ‘எனக்கு இந்த கஷ்டம் உள்ளது. அந்த கஷ்டம் உள்ளது என்று மட்டும் வீட்டில் புலம்பக் கூடாது.’ உங்களுக்கு என்ன விஷயங்கள் நல்லதாக தேவைப்படுகிறதோ அதை வேண்டுதலாக அம்பாளிடம் சொல்லுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து நல்ல மாற்றங்கள் வருவதை காண்பீர்கள்.

- Advertisement -

எங்களால் வெள்ளி தங்கம் வாங்கும் அளவிற்கு எல்லாம் வசதி இல்லை. நாங்கள் என்ன செய்வது. சிறிய பித்தளையில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கில் தங்க நிறத்தில் இருக்கும் 5 ரூபாய் நாணயத்தை போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டுத் தீபம் ஏற்றினாலும் நன்மையே நடக்கும். இருப்பினும் தங்கம் வெள்ளி என்பது ஐஸ்வர்யத்தை குறிக்கக் கூடிய பொருள். தங்கமும் வெள்ளியும் நம் வீட்டு பூஜை அறையில் இருந்தால் அது நமக்கு ஐஸ்வர்யத்தை கொடுக்கும்.

five-rupee-coins

தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் பித்தளை விளக்கில் இந்த பரிகாரத்தை செய்தும் பலனடையலாம். கூடுமானவரை பணம் சேமித்து தங்கம் வெள்ளி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வர வேண்டும். அதற்காகவாவது பணத்தை சேமித்து சிறிய காமாட்சி அம்மன் விளக்கும் ஒரு சிறிய தங்க காசும் வாங்கி வீட்டில் வைத்துப் பாருங்கள். அதன் பின்பு தொடர்ந்து உங்கள் வீட்டில் தங்கமும் வெள்ளியும் சேருவதற்கு நிறையவே வாய்ப்புகள் வரும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயத்தை பின்பற்றி பலனடையலாம்.

- Advertisement -