செல்வம் பெருக வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு இத பண்ணுங்க போதும்! வற்றாத செல்வங்கள் சேர்ந்து கொண்டே செல்லும்.

lakshmi-vilakku
- Advertisement -

செல்வம் பெருக வெள்ளிக்கிழமை தோறும் கண்டிப்பாக மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வைப்பது நல்ல பலன்களை கொடுக்கும். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணனின் மனைவியாக இருக்கக்கூடிய இந்த மகாலட்சுமி அன்னை, செல்வத்திற்கு அதிபதியாக இருப்பதற்கு காரணம் அவரின் தயாள குணம் ஆகும். வேண்டியவருக்கு வேண்டியதை உடனே கொடுக்கின்றாள். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு எதை செய்தால் நமக்கும் செல்வங்கள் பெருகும்? என்கிற ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

மகாலட்சுமிக்கு மிகுந்த விருப்பமான ஒரு பொருள் ‘நெய்’ என்று கூறலாம். நெய் அள்ள அள்ள குறையாமல் வீட்டில் வைத்திருந்தால் பணமும் அள்ள அள்ள குறையாமல் சேரும் என்கிற நியதியும் உண்டு. ஊறுகாய் பிரியராக இருப்பவர் குபேரன்! எனவே வீட்டில் ஊறுகாய் எப்போதும் வைத்திருந்தால் குபேர சம்பத் கிடைக்கும் என்பது உண்மையாகும். அதே போல மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுவது, நெய் ஊற்றி சர்க்கரை பொங்கல் தயார் செய்து, நிவேதனம் வைத்து வழிபடுவது போன்றவற்றை செய்து வந்தால் வற்றாத பண வரவு எப்பொழுதும் இருக்கும்.

- Advertisement -

மங்களகரமான பொருளாக இருக்கக்கூடிய வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை எப்பொழுதும் வீட்டில் வைத்திருக்க வேண்டும். வீட்டில் வைத்திருப்பது மட்டும் அல்லாமல் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு அதை தாம்பூலமாக கொடுத்து அனுப்ப வேண்டும். இது போல அடிக்கடி நீங்கள் செய்து வருவதால் எப்பேர்ப்பட்ட தோஷங்களும் நீங்கி உங்களுக்கு வருமான உயர்வு ஏற்படும். இதனால் செல்வம் பெருக துவங்கும்.

தான, தர்மங்கள் செய்பவர்களை மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடிக்கும். எனவே நமக்கு வருவதே கொஞ்சம் தான் இதில் எங்கு தானம் செய்வது? என்று சலித்துக் கொள்ளாமல், இருக்கும் வருமானத்தில் ஒரு சிறு தொகையாவது மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறை உங்களால் முடிந்த பொழுது மற்றவர்களுக்கு அன்னதானம் செய்வது, வஸ்திர தானம் செய்வது அல்லது தேவையான உதவிகளை செய்வது போன்ற தானங்களை செய்யலாம். இதனால் மகாலட்சுமி மனம் குளிர்ந்து உங்களுக்கு வற்றாத செல்வத்தை கொடுப்பாள் என்று உறுதியாக கூறுகிறது ஆன்மீகம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி சர்க்கரை பொங்கல் படைத்து இந்த மங்களகரமான பொருட்களை எல்லாம் வைத்து, அன்றைய தினம் நீங்கள் யாராவது ஒருவருக்கு தானம் செய்து, பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்ய வேண்டும். இந்த மந்திரம் ரொம்பவும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆகும். அஷ்ட லட்சுமிகளின் அருளையும் பரிபூரணமாக கிடைக்க செய்யக்கூடிய இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பூஜை அறையை விட்டு நீங்குங்கள். இது போல நீங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் செய்து வர அனைத்து தடைகளையும் எதிர்க்கக் கூடிய வல்லமை உண்டாகும்.

மந்திரம்:
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா,
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா,
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே,
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே,
ஓம் அஷ்டலட்சுமி திருவடிகளே போற்றி!

எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளித்து வெற்றி நடை போடக்கூடிய அற்புதமான ஆற்றலை கொடுக்கக் கூடிய இந்த மந்திரத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும். எந்த ஒரு மந்திரத்தையும் மனதார மனதிற்குள்ளேயே உச்சரிக்காமல் இறைவனை முழுமையாக உட் கிரகித்து வாய் வழியாக சத்தமாக உச்சரிக்க வேண்டும். அப்பொழுது தான் உங்களுக்கு தெய்வத்தின் அருள் எளிதாக கிடைக்கும். மேற்கூறிய எல்லா விஷயங்களையும் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் செய்து வர செல்வம் ஆனது வற்றாமல் சேர்ந்து கொண்டே செல்லும்.

- Advertisement -