வெள்ளிக்கிழமை 1 ரூபாயை இப்படி செலவு செய்தால், பல லட்ச ரூபாய் நமக்கு திரும்பவும் கிடைக்கும்.

mahalakshmi2
- Advertisement -

என்னதான் ஓடிஓடி உழைத்தாலும் கைக்கு வரக்கூடிய வருமானம் நிலையாக இருப்பது கிடையாது. கடன் பிரச்சனை தலைக்கு மேல் ஏறிக் கொண்டுதான் செல்கிறது. இந்த பண பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏதாவது சுலபமான பரிகாரம் உள்ளதா என்று கேட்பவர்களுக்கு, பணத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியது ஒரு மகாலட்சுமி வசிய பூஜையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை செய்து வந்தால் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு படிப்படியாக உயரத் தொடங்கும்.

இந்த பரிகாரத்திற்க்கு கட்டாயமாக ஒரு வெள்ளிக் கிண்ணம், அல்லது வெள்ளி டம்ளர், வெள்ளித்தட்டு ஏதாவது ஒன்று தேவை. வெள்ளியால் செய்த பாத்திரத்தில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு சிறிய அளவில் இருக்கும் வெள்ளி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே 1 ரூபாய் நாணயங்களை நிரப்பி மகாலட்சுமி தாயார் பாதங்களுக்கு முன்பாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

எப்போதும் போல வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய வீட்டில் எப்படி பூஜை செய்வீர்களோ, தீபம் ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, நிவேதனம் வைத்து, வாசனை மிகுந்த தூபம் போட்டு, தீபாராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டங்களை அந்த மகாலட்சுமி தாயாரிடம் சொல்லி அந்த கஷ்டங்களெல்லாம் கூடிய விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அதன்பின்பு அந்த வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து இருக்கிறீர்கள் அல்லவா அதிலிருந்து உங்களுக்கு தேவையான காசை எடுத்து, 2 வாழைப் பழங்கள் வாங்கி அதை பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

நீங்கள் சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களுடைய முதலீடு என்பது இருக்கும் அல்லவா. அந்த முதலீட்டுடன், இந்த வெள்ளிக் கிண்ணத்தில் இருக்கக்கூடிய நாணயங்களை எடுத்து சேர்த்து தொழில் செய்யும்போது உங்களுடைய தொழிலில் இரட்டிப்பு லாபத்தை பெறமுடியும்.

ஆனால் மகாலட்சுமி பாதங்களில், வெள்ளிக் கிண்ணத்தில் நீங்கள் நாணயங்களை எடுக்க எடுக்க மீண்டும் அதில் புதிய நாணயங்களை நிரப்பி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று இந்த நாணயங்களை எடுத்து நீங்கள் சுப செலவு செய்ய வேண்டும். அதே வெள்ளிக்கிழமை அன்று அந்த வெள்ளிக் கிண்ணத்தில் மீண்டும் புதிய நாணயங்களை போட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை நாம் முழுமையாக பெற முடியும். இது ஒரு சின்ன சுலபமான பரிகாரம் தான். ஆனால் உங்களுக்கு நிறைய வருமானத்தை அள்ளித் தரக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரமாகவும் இது திகழும். முயற்சி செய்து தான் பாருங்களேன்.

- Advertisement -