அதிகாரம், ஆளுமை, அடுத்தவர்களை அடக்கி ஆளும் திறமை இவை அனைத்தையும் பெற இறைவனுக்கு இந்த 1 இலையை கொண்டு அர்ச்சனை செய்து வாருங்கள். உங்களை வெல்ல இந்த உலகத்தில் யாராலும் முடியாது.

ven-naval-maram
- Advertisement -

அடுத்தவர்களை அடக்கி ஆளும் திறமை நம்மிடம் இருந்து விட்டாலே போதும். இந்த உலகத்தை சுலபமாக வென்று விடலாம். அடுத்தவர்களை அடக்கி ஆள்வது என்றால் என்ன? அடிமைப்படுத்தி வைத்துக் கொள்வதா. கிடையாது, நாம் சொல்லும் சொல்லை அடுத்தவர்கள் கேட்டு நடந்தாலே போதும். அது நமக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். சில அலுவலகங்களில் நாம் பார்த்திருப்போம். பெரிய பெரிய பதவியில் இருப்பவர்களுடைய சொல்லுக்கு கூட மதிப்பும் மரியாதையும் இருக்காது. அதே அலுவலகத்தில் பியூனாக, கிளார்க்காக பணி புரிபவருடைய சொல்லுக்கு நிறைய மரியாதை இருக்கும். இப்படிப்பட்ட ஆளுமை திறமை, வசிய திறமை, அடுத்தவர்களை தன் சொல்படி கேட்டு நடக்க வைக்கும் திறமை, ஒரு சில பேரிடம் இருக்கின்றது. இவர்களுக்கு இந்த வரத்தை இறைவன் இயற்கையாகவே அளித்துள்ளான்.

ven-naval-maram1

ஆனால், நம்முடைய சொல் எடுபடவில்லை. நிறைய படித்திருக்கிறோம். நமக்கு நிறைய அறிவு இருக்கின்றது. ஆனாலும் நமக்கான அங்கீகாரமும் பதவியும் கிடைக்க வில்லை. பதவி கிடைத்தும் பவர் இல்லை, என்றால் நாம் என்ன செய்வது. அதற்கான பரிகாரமும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த பரிகார பூஜைக்கு நமக்கு தேவையானது ஒரே ஒரு பொருள்தான். வெண்நாவல் மரத்தின் இலை. நாவல் மரம் சாதாரணமாக எல்லா இடங்களிலும் இருக்கும். ஆனால் இந்த வெண் நாவல் மரம் என்பது கொஞ்சம் அரியவகை மரம் தான். இந்த மரத்தில் இருக்கக்கூடிய இலைகளை வைத்து எம்பெருமானை வழிபாடு செய்தால், நமக்கு ஆளுமை திறன் வந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

sucess-man

தேடி கண்டுபிடித்து வெண் நாவல் மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய இலைகளை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். அதை சுத்தமான தண்ணீரில் கழுவி விடுங்கள். வீட்டில் பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, சிவபெருமானை மனதார நினைத்து அந்த தீபத்தில் எம்பெருமானை ஆவாகனம் செய்து விட்டு, அந்த தீபத்திற்கு இந்த வெண் நாவல் மர இலைகளால் அர்ச்சனை செய்யவேண்டும். ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை சொல்லி எம்பெருமானுக்கு இந்த இலைகளால் அர்ச்சனை செய்துவிட்டு மனதார உங்களுடைய புத்திகூர்மை அறிவுத்திறன் ஆளுமை திறன் அனைத்தும் மேலோங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் சிவபெருமானின் திருவுருவப்படம் இருந்தால், திருவுருவப்படத்திற்கு இந்த வெண் நாவல் மர இலைகளை மாலையாகவும் கட்டிப் போடலாம். அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.

ven-naval-maram1

இப்படி தொடர்ந்து எத்தனை நாட்கள் செய்வது. உங்களுக்கு எப்போதெல்லாம் வெண்நாவல் மரத்தின் இலைகள் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இதைச் செய்யலாம். அரசியலில் பெரியதாக சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பெரிய பதவியை விரும்புபவர்கள், புகழின் உச்சிக்கே செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பூஜையை தொடர்ந்து வீட்டில் செய்து வந்தால் நிச்சயமாக அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

shivan

இதுதவிர வெண் நாவல் மரத்தில் இருந்து பூக்களும் காய்களும் கனிகளும் சிவபெருமானுக்கு படைத்து உங்களுடைய வேண்டுதலை வைக்கலாம். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது. உங்களுக்கு வெண்ணாவல் மரத்தின் இருந்து இலைகள் கிடைத்தாலோ, பூ காய் கனி கிடைத்தாலொ இந்தப் பூஜையை முயற்சி செய்து தான் பாருங்களேன். நிச்சயமாக அந்த ஆண்டவன் உங்களை கைதூக்கி விடுவான் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -