பவுடர் எல்லாம் இனி தேவையே இல்லைங்க. வெள்ளை அடித்தது போல, உங்கள் முகம் வெள்ளையாகவே இருக்க வெந்தய பொடி போதும்.

face4
- Advertisement -

பவுடர் போட்டது போல நம்முடைய முகம் எப்போதுமே வெள்ளையாக இருக்க வேண்டும். பார்ப்பதற்குப் பொலிவாக இருக்க வேண்டும். முகப்பரு தொந்தரவு, கரும்புள்ளி தொந்தரவு, எண்ணெய் வடிய கூடிய பிரச்சனை எதுவுமே இருக்கக்கூடாது. சுருக்கமாக சொல்லப்போனால் உலக அழகி கூட மேக்கப் போட்டால் தான் அழகாக தெரிவார்கள். ஆனால் நாம் மேக்கப் போடாமலேயே அழகாக தெரிய வேண்டும் என்றால் என்ன செய்வது. இயற்கையான முறையில் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். நம் வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய 2 பொருட்களை வைத்து தான் இந்த ஜெல் தயார் செய்யப் போகின்றோம்.

இது ஒரு நைட் க்ரீம். ஜெல் போல தயார் செய்யப் போகின்றோம். வாங்க ரெமிடிக்கு உள்ளே போகலாம். முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வெந்தயம் – 2 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இந்த பொடியை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது வெந்தயம், சோம்பு, இந்த இரண்டு பொருட்களில் இருக்கும் எசன்ஸ் அந்த தண்ணீரில் நன்றாக இறங்கி இருக்கும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீரை ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். கால் டம்ளர் அளவு இந்த தண்ணீர் கிடைத்தால் கூட போதும்.

நாம் ஜெல் தயாரிப்பதற்கு தேவையான வெந்தயம், சோம்பு தண்ணீர் 1/4 கப் நமக்கு கிடைத்திருக்கும் அல்லவா. இந்த தண்ணீரோடு விட்டமின் E கேப்ஸ்யூல் – 1, அலோ வேரா ஜெல் – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/4 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து கலந்தால் ஜெல் போல நமக்கு ஒரு க்ரீம் கிடைத்திருக்கும். (விட்டமின் ஈ கேப்ஸ்யூலை வெட்டி உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

இந்த க்ரீமை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் கெட்டுப் போகாது. அப்படியே வெளியில் வைத்தால் 3 நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். வழக்கம் போல ராத்திரியில் தான் இந்த கிரீமை உங்கள் முகத்தில் போட வேண்டும். முகத்தை சுத்தமாக கழுவி தண்ணீரை துடைத்து விடுங்கள்.

லேசாக இந்த க்ரீமை உங்கள் விரலில் தொட்டு முகத்தில் ஆங்காங்கே வைத்து விட்டு, வட்ட வடிவில் அப்படியே மசாஜ் செய்து கொடுத்தால் க்ரீமை உங்களுடைய முகம் உள்ளே இழுத்துக் கொள்ளும். அப்படியே தூங்கச் செல்லலாம். மறு நாள் காலை எழுந்து உங்களுடைய முகத்தை கழுவ வேண்டியது தான். இதே போல தினமும் இந்த கிரீமை போட்டு வரும் போது உங்களுடைய சருமத்தின் நிறம் படிப்படியாக வெள்ளையாக மாற தொடங்கும். கரும்புள்ளிகள் முகப்பரு படிப்படியாக குறையும். நீங்கள் எதிர்பாராத நல்ல மாற்றத்தை 30 நாட்களில் பார்க்கமுடியும். உங்களுக்கு புடிச்சு இருந்தா உங்க வீட்ல இந்த ரிமெடி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -